Showing posts from May, 2022

கடலூர் மாவட்டம் கிள்ளை திமுக நகர கழக சார்பில் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் குட்டி ஆண்டிச்சாமி தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கிள்ளை நகரக் கழகச் செயலாளரும் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவருமான கிள்ளைரவீந்திரன் அவர்கள் முன்னிலையில் சிறப்பான செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பேரூராட்சி சார்பாக அனைத்து வார்டுகளில் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை தமிழக அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா ஆகிய இருவருக்கும் நடுவே கலைஞர் சிலை அமைக்க வேண்டும் என்றும் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது

கடலூர் மாவட்டம் கிள்ளை திமுக நகர கழக சார்பில் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு நகர அவ…

அண்ணாமலைநகர் பேரூராட்சியில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது

அண்ணாமலைநகர் பேரூராட்சியில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது க…

ஈரோடு தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தற்பொழுது மாவட்ட தலைமை அலுவலகம் கமலாலயத்தில் நடைபெற்றது.

ஈரோடு தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தற்பொழுது மாவட்ட தலைமை அலுவலகம் கமலாலயத்தில் ந…

பா.ம.க. தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்வு:

பா.ம.க. தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்  தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்வு: …

30.5.2022மதுரையில் சங்கரன்கோவில்குறிஞ்சாங்குளம் கிராமத்தைச் சார்ந்தஊர் நாட்டாமை இளைஞர்கள் அண்ணன் #எழுச்சித்தமிழர் அவர்களைசந்தித்தபோது நானும் அவர்களுடன்(நான் யூடியூப் சேனலில் குறிஞ்சாங்குளம்கிராமத்தைப் பற்றி பேசியதற்குஇளைஞர்களும் ஊர் நாட்டாமை அவர்களும்நன்றி தெரிவித்தார்கள்)

30.5.2022 மதுரையில்   சங்கரன்கோவில் குறிஞ்சாங்குளம் கிராமத்தைச் சார்ந்த ஊர் நாட்டாமை இளைஞர்கள்  அண்…

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் இரண்டு நாட்களாக ஒரு பெண், ஆணிடம் உரையாடும் போன் ஆடியோ ரெக்கார்டு வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது அந்த ஆடியோ ரெக்கார்டில் அப்படி என்னதான்? பேசி இருக்காங்க! அவர்கள் பேசியதாவது..

திமுக நகர செயலாளரின் நிதானமற்ற பேச்சால் சர்ச்சை   ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் இரண்டு நாட்களாக …

தேனி மாவட்டம் பெரியகுளம் சார் ஆட்சியராக பணியாற்றிவந்த ஐஏஎஸ் அதிகாரி சி.எ. ரிஷப் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி சார் ஆட்சியராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

பணிமாறுதல் செய்யப்பட்டார் சார் - ஆட்சியர் தேனி மாவட்டம் பெரியகுளம் சார் ஆட்சியராக பணியாற்றிவந்த ஐஏஎ…

தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் நிறுவன தலைவர் மு. சிவதமிழவன் அவர்கள் தலைமையில் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம், சூலக்கல் கிராமத்தைச் சேர்ந்த மூத்தப் பத்திரிக்கையாளரான களம் வி. மணிகண்டன் அவர்களை கடந்த 15.05.2022 அன்று சென்னையில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக மேற்படி யூனியனின் கோவை மாவட்டத் துணைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது. அவருக்கு தமிழகம் முழுக்க உள்ள செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரு. மணிகண்டன் அவர்கள் மேலும் பல்வேறு பொறுப்புகளில் மக்கள் பணி செய்ய நாமும் வாழ்த்துவோம்.....

தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் நிறுவன தலைவர் மு. சிவதமிழவன் அவர்கள் தலைமையில்…

திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். திண்டிவனம் தாலுகா அலுவலகம் அருகே அரசு வங்கி தேர்வில் தமிழ்நாட்டில் தமிழுக்கு இடம் அளிக்காததை கண்டித்து திராவிட கழக இளைஞரணி சார்பில் கண்டன கோஷம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டிவனத்தில் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.     திண்டிவனம் தாலுகா அலுவலகம் அருகே அரசு வ…

அதிவிரைவு படையினர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாம் மத்திய அரசின் அதிவிரைவு படையினர் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள காவல் நிலைய எல்லை பகுதி யில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.

அதிவிரைவு படையினர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாம்      மத்திய அரசின் அதிவிரைவு படையினர் விழுப்புரம…

ராணிப்பேட்டை மாவட்டம் உலகிலேயே முதன்முறையாக காலை 7 மணி முதல் 10 மணி வரை மூன்று மணி நேரத்தில் மாவட்டத்தில் உள்ள 2,500 சதுர கிலோ மீட்டர் பகுதிகளில் 186.914 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற ராணிப்பேட்டை மாவட்டம் உலக சாதனை படைத்துள்ளது

பாலாறு ரோட்டரி சங்கத் தலைவர் மாவட்ட  ஆட்சியருக்கு வாழ்த்து  ராணிப்பேட்டை மாவட்டம்  உலகிலேயே முதன்மு…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் தவர்தாம்பட்டு ஊராட்சி மேல் தவர்தாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் நேற்றிரவு அப்பகுதியில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது குளத்தில் இருந்த முதலை கடித்ததால் காயமடைந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

*கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் தவர்தாம்பட்டு ஊராட்சி மேல் தவர்தாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்…

திண்டிவனம் தபால் நிலையம் எதிரே விசிக, சிபிஐ(எம்), சிபிஐ -ஆகிய கட்சிகள் இணைந்து பெட்ரோல், டீசல் ,கேஸ், விலை உயர்வு வேலையின்மை வெறுப்பு அரசியலுக்கு எதிராக மத்திய ஒன்றிய மோடி அரசை கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டிவனம் தபால் நிலையம் எதிரே விசிக, சிபிஐ(எம்), சிபிஐ -ஆகிய கட்சிகள் இணைந்து பெட்ரோல், டீசல் ,கேஸ…

நாடுதழுவிய ஆர்ப்பாட்டம்************************ஒன்றிய மோடி அரசின் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டரின் கடுமையான விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 26 - 05-2022 தேதி வையம்பட்டி பேருந்து நிறுத்தம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் சிபிஎம் ஒன்றிய செயலாளர் வெள்ளைசாமி தலைமையில் நடைபெற்றதுசிபிஎம் வெள்ளைசாமி, ராஜீ, ஆரோக்கியசாமி. ஆரோக்கியம்சிபிஐ ஸ்டீபன் சேகர், பொன்னர். ராமசாமி, பெரியசாமி, கனகராஜ்விசிக வேல்முருகன, மணிவேல், பாண்டியன், சாவித்திரி முன்னிலை வகித்தனர்ஆர்ப்பாட்ட கண்டன உரையாக சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் P.கனேசன்சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம்சிபிஐ ஒன்றிய செயலாளர் AT சண்முகானந்தம்விசிக ஒன்றிய செயலாளர் முருகேசன் உறையாற்றினார்கள்

நாடுதழுவிய ஆர்ப்பாட்டம் ************************ ஒன்றிய மோடி அரசின் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டரி…

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விலை உயர்வை எதிர்த்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம்  மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விடுதலை சிறுத்தைக…

மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக போராட்டம் நாமக்கல்லில் பூங்கா சாலையில் நடைபெற்றது போராட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை தீர்க்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது கோரிக்கைகள் 1 2015 நவம்பர் முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை உடனடியாக வழங்க போக்குவரத்து ஊழியர்களின் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்து 2020 முதல் விருப்ப ஓய்வில் சென்றவர்களுக்கு இறந்தவர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் பணப் பயன்களை வழங்கி டுக

மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக போராட்டம் …

நாகை அருகே குருக்கத்தியில் மீன் ஏற்றிச் சென்ற டெம்போ வாகனம் கவிழ்ந்து அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சற்குணம் என்ற மீனவப் பெண்மணி சம்பவ இடத்துலயே பலி, வாகனத்தில் இருந்த 7 மீனவப் பெண்கள் ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைப்பு*

நாகப்பட்டினம்  25.05.22 *நாகை அருகே குருக்கத்தியில் மீன் ஏற்றிச் சென்ற டெம்போ வாகனம் கவிழ்ந்து அக்க…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நால் ரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜெ.குரு அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜெ.குரு நினைவு கொடி கம்பம் ஆவரங்காடு பகுதியில் கொடியேற்றப்பட்டது... இந்நிகழ்ச்சியில் உமாசங்கர் மாநில இளைஞர் சங்க துணைத் தலைவர் தலைமை தாங்கினார். செய்தியாளர் கணேஷ்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மெயின் ரோடு  பஜார் வீதி, மசூதி எதிரே எம்என் காம்ப்ளக்ஸ்சில்  டிஸ்கவரி …

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மெயின் ரோடு பஜார் வீதி, மசூதி எதிரே எம்என் காம்ப்ளக்ஸ்சில் டிஸ்கவரி என்ற புதிய ஆய்வகத்தை,ஆய்வக உரிமையாளர் டாக்டர் ராமலிங்கம் தலைமையில் திமுக மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் ஜி.வினோத் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார் இந்த நிகழ்வின்போது வாலாஜா நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.செய்தியாளர் எஸ்.ஆனந்தன்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மெயின் ரோடு  பஜார் வீதி, மசூதி எதிரே எம்என் காம்ப்ளக்ஸ்சில்  டிஸ்கவரி …

2022ஆம் ஆண்டு மீண்டும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வை ஈரோடு மாவட்ட பீனிக்ஸ் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில் நடந்துள்ளது ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுக்காவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஒரு குடும்பத்தில் இரண்டு மாற்றுத்திறனாளிகளை கொண்டு வாழ்ந்து வந்த ஒரு தம்பதி இடமிருந்து மாவட்ட துணைத்தலைவர் திரு அருணாசலம் அவர்களின் வாயிலாக மாநில துணை பொதுச்செயலாளர் மற்றும் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் அவர்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக ஒரு புகார் மனு ஒன்று வந்தது அதை விசாரிக்கும்போது அந்த குடும்பத்தில் குடி தண்ணீருக்கு கூட சிரமப்படும் நிலை தெரியவந்தது அதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் அந்த குடும்பத்திற்கு அந்த பிரச்சனையை சரிசெய்து குடிதண்ணீர் கிடைக்கவும் அது சிரமமின்றி கிடைக்கவும் வழிவகை செய்து கடைக்கோடியில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளிகளில் குடும்பத்தில் அவர்களுடைய உரிமையை நிலைநாட்டிக் கொடுத்ததை எண்ணி இந்த இயக்கம் மகிழ்ச்சி கொள்கிறது...

2022ஆம் ஆண்டு மீண்டும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வை ஈரோடு மாவட்ட பீனிக்ஸ் மாற்றுத்திறனாளிக…

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட வார்டு களில் இன்று கிள்ளை ஜிகிஜிகி சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் கேள்விகளுக்கு தீர்வுகளுக்கான பதில் சொல்லும்போது, கிள்ளை பேரூராட்சி பொன்னந்திட்டு 4வது வார்டு யாதவர் தெருவிற்கு சுமார் 10 ஆண்டுகளாக பேரூராட்சியின் குடிநீர் செல்லவில்லை எப்போது சரிசெய்வீர்கள்? என்று திரு கதிரவன் என்பவர் கேள்வியை நேற்று 12.30க்கு முன்வைத்தார்.. அதற்கு நான் பதில் சொல்லும்போது 24 மணி நேரத்தில் சரிசெய்து தருவதாக உறுதி அளித்தேன் அதன்படி இன்று பகல் 12.00 மணிக்குள்ளாக அந்த பணி செய்துமுடிக்கப்பட்டது..அந்த தெருவிற்கு செல்லும் வாய்கால் குறுக்கே 10 ஆண்டுகளுக்கு முன்பு மதகு கட்டும்போது குடிநீர் இரும்பு குழாயை நசுக்கி அடைபட்டுவிட்டது, ரோட்டை குறுக்கே வெட்டவேண்டும் இதற்கு நெடுஞ்சாலைதுறை அனுமதி வேண்டும் என்றே 10 ஆண்டுகளாக போகாத ஊருக்குவழி சொல்லி உள்ளனர் கடந்த ஆட்சியில் இந்த கோரிக்கையை விரைவில் சரிசெய்து தருகிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. உடனடியாக கிள்ளை பேரூராட்சி தலைவர் மல்லிகா மற்றும் துணைத் தலைவர் வழக்கறிஞர் கிள்ளை ரவீந்திரன் உடனடியாக சரி செய்தனர்

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட வார்டு களில் இன்று கிள்ளை ஜிகிஜிகி சமுதாய கூடத்தில…

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள் இன்று (25.05.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக தரைதளத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் மொழிக்காவலர்கள், ஆகியோர்களின் திருவுருவப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்து, பார்வையிட்டார்.உடன் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.பாலாஜி, மகளிர் திட்ட அலுவலர் திருமதி. கெட்ஸி லீமா அமாலினி உட்பட பலர் உள்ளனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள் இன்று (25.05.2022) மாவட்ட ஆட்சித்த…

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஊராட்சியில் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் தலைமையில் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்த மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஊராட்சியில் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக, இரண்டு…

தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளரின் தாயார் பவானி வேணுவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளரின் தாயார் பவானி வேணுவின் முதலாம் ஆண்டு…

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை விவகாரம்:பக்தர்களுடன் பொது தீட்சிதர்கள் இணக்கமாக செயல்படவேண்டும்

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை விவகாரம்: பக்தர்களுடன் பொது தீட்சிதர்கள்  இணக்கமாக செயல்படவேண்டும் …

க.ஆலம்பாடி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட துவக்க விழா

க.ஆலம்பாடி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட துவக்க விழா  …

மே 29ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் இரா முத்தரசன் அவர்கள் சோமரசம்பேட்டையில் பேசுகிறார்

மே 29ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் இரா முத்தரசன் அவர்கள் சோமரசம்பேட்டை…

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வரும் முன் காப்போம் திட்டம் மற்றும்-சொர்ண மாளிகை உரிமையாளர் ஜெகநாத செட்டியார் நினைவாக,சங்கர் கிளினிக்,லயன்ஸ் கிளப்,பெரியகுளம் கோவிந்தன் மயில்தாயம்மாள் திருமண மண்டபம்,வட்டாரகளஞ்சியம்,மாவட்டபார்வையிழப்பு தடுப்புசங்கம்,தேனி அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்-இலவச சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் கண் விழித்திரை பரிசோதனை முகாம் நடைபெற்றது..மருத்துவ முகாமை சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார்,நகர்மன்றத்தலைவர் சுமிதா சிவக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.மருத்துவமருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்டோருக்கு கண்புரை பரிசோதனை செய்து தேனி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துசென்று இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டன.ஏராளமானோர் கண் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை மேற்கொண்டனர்.நிகழ்ச்சியில் சங்கர் கிளினிக், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர்,லயன்ஸ் கிளப் நிர்வாகிகள்,சிறப்பு அழைப்பாளர்கள்,பொதுமக்கள்ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வரும் முன் காப்போம் திட்டம் …

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் கல்வி மையம் மூலமாக படித்த மாணவ மாணவிகள் சிறந்த முறையில் தேர்ச்சிபெற்றனர். இவர்களுக்கு கொச்சியில் இன்டர்நேஷனல் அஸ்ட்ரோ பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற ஜோதிட பட்டமளிப்பு விழாவில் ஜோதிட சாஸ்திரம் மற்றும் வாஸ்து சாஸ்திரம் என்ற விருதை கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.மற்றும் இந்த விழாவில் மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் கல்வி மையத்தின் நிறுவனர் தலைவர் நல்வாழ்க்கை ஜோதிடர் பி.ஏ.முகுந்தன் முரளி அவர்களுக்கு ஜோதிடத் துறையில் வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதை கொடுத்து கௌரவிக்கப்பட்டது.செய்தியாளர் கணேஷ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் கல்வி மையம் மூலமாக படித்த  மாணவ மாணவி…

திண்டிவனம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக் கோவில் தேரோட்ட திருவிழா உற்சவம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

திண்டிவனம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக் கோவில் தேரோட்ட திருவிழா உற்சவம் திரளான  பக்தர்கள் சாமி…

கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத் தின் கீழ் குச்சிப்பாளையம் கிராமத்தில் குளம் தூர்வாரப்படு கிறது. இந்த பணியில் 70-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத் தப்படுகிறார்கள். இந்த நிலையில் இப்பணியை பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகாமுத்துக்குமார், துணைத்தலைவர் கிள்ளைரவீந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்து, பணியை தரமாக செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் செல்வி, தலைமை எழுத்தர் செல்வம், கவுன்சிலர் குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத் தின் கீழ் குச்சிப்பாளையம் கிர…

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புது ஏரி அனத்தாங்கல் ஆகிய கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலையில் மின்கம்பம் உள்ளது இந்த மின் கம்பத்திலுள்ள மின் இணைப்பு கம்பி கை தொடும் அளவில் மிகவும் தொங்கி ஆபத்தான நிலையில் உள்ளது இதனால் மனிதர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது இதனை சரி செய்து தர ஈபி நிர்வாகத்துக்கு அங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் இதனை சரிசெய்யுமா? சக்கரமல்லூர் ஈபி நிர்வாகம்.செய்தியாளர் எஸ்.ஆனந்தன்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புது ஏரி அனத்தாங்கல் ஆகிய கிராமங்களை இணைக்கும்  இணைப்பு சாலையி…

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் 8 நான்கு சக்கர வாகனம் மற்றும் 51 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 59 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த வாகனங்களுக்கான பொது ஏலம்

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் 8 நான்கு சக்கர வாகனம் மற்றும் 51 இருசக்கர வாகனங்கள் என மொ…

Load More That is All