பணிமாறுதல் செய்யப்பட்டார் சார் - ஆட்சியர்
தேனி மாவட்டம் பெரியகுளம் சார் ஆட்சியராக பணியாற்றிவந்த ஐஏஎஸ் அதிகாரி சி.எ. ரிஷப் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி சார் ஆட்சியராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவர்
பெரியகுளம் கோட்டத்தில் நடைபெற்ற அனைத்து நில மோசடிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் க.வி முரளிதரன் அவர்களுடன் இணைந்து தைரியமாக கண்டுபிடித்து பல நூறு ஏக்கர் நிலத்தை மீண்டும் அரசினுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்து அரசு உதவிகளையும் சிறப்பாக கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது