ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் 8 நான்கு சக்கர வாகனம் மற்றும் 51 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 59 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த வாகனங்களுக்கான பொது ஏலம்

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் 8 நான்கு சக்கர வாகனம் மற்றும் 51 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 59 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த வாகனங்களுக்கான பொது ஏலம் ஆனைக்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 28-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும் வாகனங்களை வருகிற 27-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் பார்வையிடலாம். வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள், இருசக்கர வாகனத்திற்கு ரூ.2 ஆயிரமும், 4 சக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரமும் 27 மற்றும் 28-ந்தேதிகளில் பொது ஏலம் நடத்தும் இடத்தில் முன் பணம் செலுத்த வேண்டும். முன் பணம் செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் ஏலம் விடும் இடத்தில் செலுத்தி அப்போதே வாகனத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
Previous Post Next Post