தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஊராட்சியில் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் தலைமையில் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்த மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஊராட்சியில் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் தலைமையில் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்த மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. 

இந்த முகாமில் 12 லட்சத்தி 33 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் 319 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்த முகாமில் அனைத்து துறைகளின் சார்பாக வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் பார்த்து சென்றனர். இதில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் தமிழகத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணம் நிகழ்வு சற்று குறைந்துள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் குழந்தைத் திருமணங்களை தடுக்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கு வரும் சுதந்திர தினத்தன்று சிறப்பு பரிசு வழங்கப்படும் எனவும், குழந்தை திருமணங்கள் நடக்கவிருப்பதை தெரிவிக்கும் நபர்களுக்கு தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு கௌரவ படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

மேலும் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் அந்தந்த துறையின் சார்பாக மக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார்,  பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப், மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
Previous Post Next Post