அய்யா..... எனதுகிணற்றை காணோம்
தேனி SP யிடம் புகார் மனு
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் குடியிருந்து வருபவர் மாரிமுத்துசெட்டியார் மகன் செந்தில்குமார்
இவருக்கு பட்டனார் வழியில் பூர்வீக நிலம் சர்வே எண் 280/6-ல் 05 - 5 ஏர்ஸ் 14 செண்ட் புஞ்சை உள்ளது. அந்த நிலத்துக்கு நீர் ஆதராமாக சதுர கிணறும் இவருடைய அனுபவ நிலத்தில் இருந்துள்ளது.
செந்தில்குமார் குடும்பத்துடன் சென்னையில் தங்கி பணியாற்றுவதை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் சுருளியாண்டி மகன்களான ராமச்சந்திரன்-முருகன் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக தனது நிலத்தை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்துவிட்டதாக தெரிகிறது
மேலும் செந்தில்குமார் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்-தேனி ஆட்சியர் - காவல்துறை தலைவர் - மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு ஆகியோருக்கு 18.5 - 2022ம் தேதி புகார் மனு அனுப்பியுள்ளார்
அதற்க்கு முன்பு தனது நிலத்தையும் - நிலத்தில் இருந்த கிணற்றையும் மூடிவிட்டார்கள் என சம்மந்தப்பட்ட நபர்கள் மீது 2018ம் வருடம் தேனி மாவட்ட நில அபக்கரிப்பு பிரிவில் புகார் மனு செய்யப்பட்டு அந்த புகார் மனு மீது வழக்கு எண் 25/2018 -ன்படி வழக்குபதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது
வழக்குபதிவு செய்யப்பட்டும் இன்றுவரை குற்றவாளிகளை கைது செய்யாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக காவல்துறை குற்ற இறுதியறிக்கை முறையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றும். குற்றவாளிகளுக்கு ஆதவாக காவல்துறையினர் செயல்படுவதாகவும்-
விரைந்து மோசடி பேர்வழிகள் மீது இறுதிகுற்ற அறிக்கை தார்கள் செய்து எனது நிலத்தையும் - அந்த நிலத்தில் உள்ள கிணற்றையும் மீட்டு தருமாறு இன்று 24 - 5 - 2022-ம் தேதியில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தார்
கிணத்தையும் - நிலத்தையும் காணவில்லை என்று வடிவேல்பாணியில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.