மே 29ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் இரா முத்தரசன் அவர்கள் சோமரசம்பேட்டையில் பேசுகிறார்

மே 29ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் இரா முத்தரசன் அவர்கள் சோமரசம்பேட்டையில் பேசுகிறார்

*அனைவருக்கும் வணக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய 4வது மாநாடு பேரணி பொதுக்கூட்டம் 29.5.2022 மாலை 5 மணி அளவில் வாசன் சிட்டியில் இருந்து மணிகண்டம் ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் MR முருகன் தலைமையில் பேரணி துவங்கி சோமரசம்பேட்டை பெரியார் சிலை அருகில் அமைந்துள்ள  மேடையில் பொதுக்கூட்டம் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் இரா முத்தரசன் அவர்கள்  மத்திய மாநில அரசாங்கத்தில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசுகிறார் பொதுக் கூட்டத்தில் முன்னாள் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் M செல்வராஜ் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் AK திராவிடமணி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் C செல்வகுமார் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் M பழனியாண்டி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தோழர் S சிவா தோழர் A அண்ணாதுரை உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் பொதுக்கூட்டத்தில்* 

*தோழர்கள் N பாஸ்கரன் S முத்துலெட்சுமி KN ஜெகநாதன் M மருதம்பாள் B கலைச்செல்வன் T சந்திரா M பழனியம்மாள் V தங்கவேல் P குமரேசன் D நிர்மலா T லதா N ரவிக்குமார் S நதியா உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கிறார்கள்* 

*பொதுக்கூட்டத்தில்* 

*புத்தூர் நால் ரோட்டில் இருந்து சோமரசம்பேட்டை வரை செல்லும் சாலையில் உள்ள வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து நாச்சிகுறிச்சி சோமரசம்பேட்டை அல்லித்துறை ஏட்டை கோப்பிலிருந்து பெட்டவைத்தலை வரை செல்லும் உய்யக்கொண்டான் ஆற்று கரையை பலப்படுத்தி அகலப்படுத்தி தார் சாலை அமைத்து தரக் கோரியும்* 

*மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தை தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை கிடைக்க வழிவகை செய்யவும் 100 நாள் வேலையை 200 நாள்க்களாக அதிகப்படுத்தி சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டியும்* 

*சோமரசம்பேட்டை இனாம் குளத்தூரில் செயல்படும் ஆரம்ப சுகாதார மருத்துவமனையை தரம் உயர்த்தி 24 மணி நேரமும் மருத்துவர் இருந்து செயல்படவும்  கூடுதல் படுக்கை வசதி செய்ய  வலியுறுத்தியும்* 

*இனாம்குளத்தூர் ரயில்வே கேட்டிற்கு புதிதாக ரயில்வே மேம்பாலம் அமைக்கவும்* 

*2019 ல் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா இடத்தை உடனே அளந்து கல்லூன்ரி தரக் கோரியும்* 

*கொரனோ காலத்தில் வேலை இழந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் தலா ரூபாய் 7500 வழங்க கோரியும்* 

*தினம் தினம் ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல் டீசல் கேஸ் விலையை கட்டுப்படுத்த கோரியும்* 

*அல்லித்துறையிலிருந்து ராம்ஜிநகர் வரை உள்ள சாலையை புதிதாக தார் சாலை அமைக்க கோரியும்* 

*உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சோமரசம்பேட்டையில் மாநில செயலாளர் தோழர் இரா முத்தரசன் அவர்கள் பேசுகிறார் இறுதியாக தோழர் S முத்தழகு நன்றி கூறுகிறார்*...
Previous Post Next Post