பா.ம.க. தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
திண்டிவனம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டார் அதனை தொடர்ந்து வரவேற்கும் வகையில் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
திண்டிவனத்தில் விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்ஜெயராஜ், தலைமையில் பா.ம.க. நகர அலுவலகம் அருகே நகரப் பா.ம.க.வினர் அதிக அளவில் திரண்டனர். அவர்கள் தாலுக்கா அருகே நான்குமுனை சந்திப்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்கள்.
அதேபோல் காந்தியார் திடல் நான்குமுனை சந்திப்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இனிப்புகள் வழங்கப்படும் நேரத்தில் அவசர ஊர்தி 108 வந்ததை அறிந்த பாமகவினர் சிறிது நேரம் 108. வழி ஒதிக்கி வாகனத்துக்கு வழியனுப்பி சிரமமில்லாமல் வழிவகை செய்தனர். பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
இதில் மாநில சட்டப் பாதுகாப்பு குழு செயலாளர் வழக்கறிஞர் பாலாஜி, மாநிலத் துணைத் தலைவர் மெ. பா. சங்கர், செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், மாவட்ட துணை செயலாளர் சலவாதி சேகர், முன்னாள் மாவட்ட செயலாளர் சம்பத், முன்னாள் நகர செயலாளர் பால்பாண்டியன். ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் நல்லாவூர் ராஜி, சண்முகம், நகர செயலாளர் ராஜேஷ், ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன், மரக்காணம் ஒன்றிய தலைவர் சலவாதி குமார், கவுன்சிலர்கள் மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் சௌந்தர், மற்றும் கோபால், ராஜ்குமார், இவர்களுடன் ஏராளமான பாமகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.