ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் இரண்டு நாட்களாக ஒரு பெண், ஆணிடம் உரையாடும் போன் ஆடியோ ரெக்கார்டு வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது அந்த ஆடியோ ரெக்கார்டில் அப்படி என்னதான்? பேசி இருக்காங்க! அவர்கள் பேசியதாவது..

திமுக நகர செயலாளரின் நிதானமற்ற பேச்சால் சர்ச்சை  

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் இரண்டு நாட்களாக ஒரு பெண், ஆணிடம் உரையாடும் போன் ஆடியோ ரெக்கார்டு  வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற  வலைத்தளங்களில் வைரலாகி
 சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது அந்த ஆடியோ ரெக்கார்டில்  அப்படி என்னதான்? பேசி இருக்காங்க! அவர்கள் பேசியதாவது.. 

முதலாவது பெண் பேசுகிறார்  சார் குட் மார்னிங், படவேட்டம்மன் கோயில் அருகில் அம்பேத்கர் நகரிலிருந்து பேசுகிறேன் எங்கள் பகுதியில் ரோடு போடுகிறீர்கள் டிரைனேஜ் கால்வாய் கட்டாமல் ரோடு போடுகிறீர்கள் உங்களால் முடியவில்லை என்றால் சொல்லுங்கள் நான் சிஎம் செல்லுக்கு மெயில் அனுப்புகிறேன்  என்று கேட்கிறார் 

அதற்கு  ஆண் பதில் சொல்கிறார் என்ன? லூசு தனமா? பேசுறீங்க, நீங்க என்ன? இன்ஜினியரிங்கா? , இன்ஜினங்கா? நீ,  கால் வாய் எடுக்காம ரோடு போடுறிங்கன்னு எப்படி?சொல்ற நீ ,ஜேசிபி வைத்து சுவர் இடிப்பார்களா?,சுவர் தாங்குமா? மூளை இருக்கா? உனக்கு முதலிலிருந்தே தகராறு செய்து கொண்டிருக்கிறாய் நீ, வேலை செய்ய விடாமல் தடுக்கிறார் என்று உன் மீது  கேஸ் கொடுத்துவிடுவேன், நீ முதலமைச்சருக்கு இல்ல 

அதுக்கும் மேல போனாலும் நீ என்னை ஒன்னும் செய்ய முடியாது, நீ எங்க வேண்டுமானாலும் போ, நான் பார்த்துக்கொள்கிறேன் மூடிக்கினு! போன் வைடி கோத்தா..! என்பதாக இந்த உரையாடல் இருக்கிறது
இந்த உரையாடலில் பேசும்    அந்த பெண் யார்? அந்த ஆண் நபர் யார்?   ஆய்வு செய்தபோது களப்பணியில் கிடைத்த தகவல்கள்   வாலாஜா நகராட்சி 1வது வார்டில்  வசித்து வரும் 

சிவசங்கரி என்பவரின் மகள் அபிநயா இவர் கல்லூரியில் படித்து வருகிறார்  போன் ஆடியோவில் பேசும் பெண் இவர்தான்  என்பது தெரியவந்தது  இரண்டு நாட்களாக போன் ஆடியோ ரெக்கார்ட் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது அந்த ஆடியோவில் பேசும் பெண்நீங்கதானா? என்று கேட்டதற்கு  ஆம் நான் தான் பேசினேன் என்று கூறினார்  

என்ன நடந்தது? யாரிடம் பேசினீர்கள் என்று கேட்டதற்கு அவரும் அவரின் தாயார் சிவசங்கரியும்  கூறியதாவது  நாங்கள் வசிக்கும் பகுதி வாலாஜா நகராட்சி 1வது வார்டு படவேட்டம்மன் கோயில் எதிரே உள்ள அம்பேத்கர் நகர்  எங்கள் பகுதியில் சாலை வசதி இல்லாமல் கரடுமுரடான பாதை இருந்து வந்தது இதனால் நாங்கள்  மிகவும் சிரமப்பட்டு வந்தோம்

 இந்த நிலையில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காந்தியிடம் கோரிக்கை வைத்தோம்  அவரும் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  இந்தப் பகுதியில் சாலை வசதி அமைத்துத் தர உத்தரவிட்டார் அதன் பேரில்  சாலை அமைப்பதற்காக பாதையை சரி செய்தனர்  சிவசங்கரி பேசும்போது என்னால் பேச முடியாததால் என் பெண் அபிநயாவை வைத்து   திமுக நகர செயலாளரும் வாலாஜா நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை என்பவரின் 

கணவருமான தில்லையிடம்  போனில் தொடர்பு கொண்டு என் மகள் பேசினார்  எங்கள் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது சாலை அமைப்பதற்கு முன்பாக வடிநீர் கால்வாய் கட்டி சாலை அமைக்க வேண்டும் தேவையான அளவு சாலைக்குரிய இடத்தை  எடுத்து கால்வாய் கட்டி சாலை அமைக்காமல் அப்படியே சாலை போடுவதற்கு முயற்சி செய்கிறீர்களே? என்று கேட்டதற்கு  அவர் என்னுடைய மகளை மரியாதை இல்லாமல் நீ என்ன? இன்ஜினியரிங் கா, நீ கேட்டால் நான் பதில் 

சொல்லனுமா?, நீ ஆரம்பத்திலிருந்தே தகராறுசெய்து கொண்டிருக்கிறாய், வேலை செய்ய விடாமல் தடுத்தார் என்று உன் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுப்பேன்  உனக்கு மூளை இருக்கா?  போன்வைடி கோத்தா! 
 என்றெல்லாம் மரியாதை இல்லாமல் பேசினார் என் மகள் மிகவும் மனவுளைச்சலுக்கு ஆளாகி மிகவும்  வருத்தப்பட்டார் 

நாங்கள் எங்களுக்காக கேட்கவில்லை ஒரு நாளைக்கு இந்த வழியாக 200க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் இந்த வழியாக சென்று வராங்க சில வீட்டுக்காரர்கள் விடுகின்ற கழிவுநீர் தண்ணீர் வழியிலேயே தேங்கி நிற்கிறது  துர்நாற்றம் வீசுகிறது இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் நடக்க முடியவில்லை   சமீபத்தில் என் மகள் அபிநயாவுக்கும்  கழிவுநீரால் டைபாய்டு ஜுரம் வந்துவிட்டது ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தோம் என் கணவருக்கு டைபாய்டு மற்றும் கொரோனா பாதிப்பு  இப்படி நாங்கள் பலமுறை  

பாதிக்கப்பட்டு வருகிறோம்  பொது விஷயத்தை கேட்டதற்கு இப்படி மரியாதை இல்லாமல் திமுக நகர செயலாளர் தில்லை பேசுவது வருத்தமாக இருக்கிறது என்றார் 
அதைத்தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்களிடம் கருத்து கேட்டபோது அவர்கள் பேசியதாவது எங்கள் பகுதிக்கு சாலை வருகிறதோ? இல்லையோ? கழிவு நீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என்பதே எங்களின் பல ஆண்டு 

கோரிக்கை கழிவுநீர் கால்வாய் இல்லாததால் தண்ணீர்  வழிகளில் தேங்கி நடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் இந்தப் பகுதியில் சாலை அமைத்து வடிநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என்றுதான்  நாங்கள் ராணிப்பேட்டை எம்எல்ஏ  
ஆர்.காந்தியிடம் மனு  கொடுத்தோம் அவரும் எங்கள் கோரிக்கையை ஏற்று சாலை அமைப்பதற்கு தொகுதி மேம்பாடு நிதியிலிருந்து சாலை 

அமைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்
கழிவுநீர் கால்வாய் சாலை அமைத்து தாருங்கள் என்று எங்கள் பகுதியை சேர்ந்த அபிநயா கேட்டதற்கு திமுக நகர செயலாளர் தில்லை அசிங்கமாகவும், அவதூறாகவும், பேசி இருக்கிறார் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம் இப்படி பேசி இருக்கிற தில்லை மீது மாவட்ட ஆட்சியரும், தமிழக முதலமைச்சரும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்றனர் 

இதுசம்பந்தமாக வாலாஜா திமுக நகர செயலாளர் தில்லையிடம் தொடர்பு கொண்டு போன் உரையாடல் சம்மந்தமாக  கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது   என்னை பார்ப்பதற்காக ஆட்கள் நிறைய வந்திருக்கிறார்கள் இப்பொழுது பேச முடியாது  பிறகு பார்க்கலாம் என்று  கூறி தொடர்பை துண்டித்து விட்டார்.

வாலாஜா திமுக நகர செயலாளரின்  நிதானமற்ற பேச்சு சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல சிக்க வைத்துவிட்டது
இந்த சம்பவம் குறித்து பாரதிய ஜனதா கட்சியினர்,இந்திய குடியரசுக் கட்சியினர்,சமூக ஆர்வலர்கள்  கண்டனம் தெரிவித்து வருகின்றனர்  காலம் என்ன பதில் சொல்கிறது பொறுத்திருந்து பார்ப்போம்.
Previous Post Next Post