திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 26:05:2022 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:30 மணி அளவில் அவ்வையார் அரங்கத்தில் கல்லூரி முதல்வர் உயர்திரு முனைவர் ந.கலைவாணி அவர்களின் தலைமையில் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் திருமிகு. என். கிருபாகரன் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் , மற்றும் செய்யாறு காவல்துறையினர் மற்றும் மாணவ மாணவிகள் அனைவரும் கலந்துகொண்ட இவ்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தினை தொடங்கி வரவேற்புரையாக முனைவர் சித. ரவிச்சந்திரன் அவர்கள் இணைப்பேராசிரியர் மற்றும் வேதியல் துறைத்தலைவர் அவர்களும், தலைமையுரையாக கல்லூரி முதல்வர் முனைவர் ந.கலைவாணி அவர்களும், சிறப்புரையாக சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் திருமிகு என்.கிருபாகரன் அவர்களும் மிகச் சிறப்பாக இவ்விழாவினை சிறப்பித்தனர். பின்பு முனைவர் கு.கண்ணன் அவர்கள் இணைப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் அவர்கள் நன்றியுரையாற்றறிட விழா சிறப்பாக நிறைவு பெற்ற.
மாவட்ட நிருபர் -
R.விஷ்ணு குமார்