நாகை அருகே குருக்கத்தியில் மீன் ஏற்றிச் சென்ற டெம்போ வாகனம் கவிழ்ந்து அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சற்குணம் என்ற மீனவப் பெண்மணி சம்பவ இடத்துலயே பலி, வாகனத்தில் இருந்த 7 மீனவப் பெண்கள் ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைப்பு*

நாகப்பட்டினம் 
25.05.22

*நாகை அருகே குருக்கத்தியில் மீன் ஏற்றிச் சென்ற டெம்போ வாகனம் கவிழ்ந்து அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த  சற்குணம் என்ற மீனவப் பெண்மணி சம்பவ இடத்துலயே பலி, வாகனத்தில் இருந்த 7 மீனவப் பெண்கள் ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைப்பு*

படக்காட்சிகள்; விபத்து வாகனம், மீனவப் பெண்கள், இறந்த பெண்மணி, ஆம்புலன்ஸ், பொது மக்கள்

நாகை மாவட்டம்  அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், சாமந்தான் பேட்டை, நம்பியார் நகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவப் பெண்கள் 8 பேர் அதிகாலையில் டெம்போ வாகனத்தில் மீன்களை ஏற்றிக் கொண்டு வியாபாரம் செய்வதற்கு திருவாரூர் நோக்கி சென்றுள்ளனர். அப்போது கீழ்வேளூர் அருகே குருக்கத்தி பள்ளிக் கூடம் வரும் போது வாகனத்தின் பின் பக்க டயர் வெடித்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய வாகனத்தின் அச்சு முறிந்து தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இதில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சற்குணம்  என்ற மீனவப் பெண்மணி தலையில் பலமாக அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் படுகாயம் அடைந்து உயிர்க்கு  7 மீனவப் பெண்களை உயிர்க்கு ஆபத்தான நிலையில் பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களில் மூன்று பேர் ரொம்ப கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. விபத்து குறித்து கீழ்வேளூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மீன் டெம்போ வாகனம் கவிழ்ந்து  உயிர் இழந்த பெண்மணியின் உறவினர்கள் கதறி அழுதது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திள்ளது.
Previous Post Next Post