கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் தவர்தாம்பட்டு ஊராட்சி மேல் தவர்தாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் நேற்றிரவு அப்பகுதியில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது குளத்தில் இருந்த முதலை கடித்ததால் காயமடைந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

*கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் தவர்தாம்பட்டு ஊராட்சி மேல் தவர்தாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் நேற்றிரவு அப்பகுதியில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது குளத்தில் இருந்த முதலை கடித்ததால் காயமடைந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்த சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் கே.ஏ.பாண்டியன் அவர்கள் அவர் சிகிச்சை பெற்று வரும் சிதம்பரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரில் சென்று அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை மருத்துவரிடம் கேட்டு அறிந்து நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது மாவட்ட கழக அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் வை.சுந்தரமூர்த்தி, மாவட்ட கழக இணைச் செயலாளர் எம்.ரெங்கம்மாள், பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் ஜெ.வசந்த், தவர்தாம்பட்டு  ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன், எள்ளேரி பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.*சிதம்பரம் செய்தியாளர் சூரியமூர்த்தி*
Previous Post Next Post