மூன்று பதக்கங்களை வென்ற தேனி மாவட்ட தலைமைக்காவலர்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 18.05.2022-ந்தேதி முதல் 22.05.2022-ந்தேதி வரை தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 12 காவல்துறையினர் கலந்து கொண்டனர். இதில் கம்பம் வடக்கு காவல் நிலையத்தை சேர்ந்த தலைமைக்காவலர் மாரியப்பன், குண்டு எறிதல் போட்டியில் 2-வது இடம் பெற்று வெள்ளி பதக்கத்தையும், தட்டு எறிதல் போட்டியில் 3-வது இடம் பெற்று வெண்கல பதக்கத்தையும், சங்கிலிக்குண்டு எறிதல் போட்டியில் 3-வது இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தையும் பெற்றார். இதையடுத்து தேசிய அளவில் சாதனை படைத்த தலைமைக்காவலரை, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்நேரில் அழைத்து தனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.