மதுரை அலங்காநல்லூர் புறநகர் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் , மத்திய அரசின் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை வாபஸ் வாங்க கோரியும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வழங்கவும், மின்சார மசோதா திருத்தச் சட்டத்தில், மின் கட்டண உயர்வை வாபஸ் பெறவும், விவசாய விலை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசின் அலங்காநல்லூர் கனரா வங்கியை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினால் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.
மதுரை அலங்காநல்லூர் புறநகர் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் , மத்திய அரசின் அத்தியாவசிய …