75வது ஆண்டு சுதந்திர அமுதப் பெருவிழாவை முன்னிட்டு திண்டிவனத்தில் இயங்கிவரும் நம்ம பசுமை திண்டிவனம் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக மூவர்ண தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் பூஞ்செடிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

75வது ஆண்டு சுதந்திர அமுதப் பெருவிழாவை முன்னிட்டு திண்டிவனத்தில் இயங்கிவரும் நம்ம பசுமை திண்டிவனம் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக மூவர்ண தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் பூஞ்செடிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

  செயலாளர் திரு. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் PRSகடை உரிமையாளருமான திரு. ரங்கமன்னார் அவர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.   16வது வார்டு கவுன்சிலர் திரு. கார்த்திகேயன், கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் அரசு வழக்கறிஞர் திரு. ரவிச்சந்திரன், வார்டு பிரமுகர் திரு. பிரகாஷ், நம்ம பசுமை இயக்க அமைப்பாளர் பாஸ்டர். இரட்சகராசர், பொருளாளர் ஆசிரியர்.திரு வெங்கடேசன், கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவச் செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கினர்.  சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 75 மரக்கன்றுகள் நடப்பட்டது.
Previous Post Next Post