திமுக அரசு சரியான திசையில் செல்கிறது என்றால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் பெங்களூர் புகழேந்தி பேட்டி...
தேனி
பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி ஓ.பன்னீர்செல்வத்தை அவரது மனைவி விஜயலட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது
உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டி எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் அ.தி.மு.க.வின்பொதுச் செயலாளராக மகுடம் சூட முடியாது. 5 1/2அறிவுள்ள எடப்பாடி அவருடன் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவரை தவறாக வழிநடத்துகின்றனர். கட்சி, மற்றும் இரட்டை இலை சின்னம் முடங்குகிறது என்றால் அதற்கு காரணம் பிசாசு கே.பி.முனுசாமி அரசியல் பச்சோந்தி.கே.பி.முனுசாமி எடப்பாடி பழனிச்சாமியை அரசியல் ரீதியாக முடிவு கட்டும் வேலையினை செய்து வருகிறார்.முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா தவறுதலாக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்ததுதான். இதுதான் இப்போதைய அரசியல் மாற்றத்திற்கு காரணம்.அவர் இதை பலமுறை தன்னிடம் கூறி வருத்தப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு கொலை கொள்ளை வழக்கு,ஊழல் புகார்களில் சிக்கித் தவிப்பதால்ஜெயிலுக்கு போவது உறுதி. அவருடன் உள்ள முன்னாள் அமைச்சர்களும் சிறை செல்வார்கள்.அதற்குக் காரணம் இந்தியாவில் நடைபெற்ற ஊழலுக்கு எல்லாம் மிகப்பெரிய ஊழலை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் நடைபெற்றுள்ளது.
துரோகத்தின் உச்சம் அடைந்த எடப்பாடி இடம் இருப்பவர்கள் எடப்பாடிக்கு துரோகம் செய்யாமல் இருந்தால் நல்லது. இவ்வாறு தெரிவித்தார்.மேலும் திமுக அரசு சரியான முடிவு எடுத்து எடப்பாடி பழனிச்சாமி மீது உள்ள வழக்குகளுக்கு அவருக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் எனவும்,தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமாக விசாரணை ஆணையம் திட்டமிட்டு போலீசாரை கொண்டு வந்து சுட்டு கொலை செய்யப்பட்டதை அறிக்கையாக அளித்ததை திமுக அரசு ரகசியம் காக்க மறந்து-செய்தியை கசியவிட்டாதாக கூறும்ஜெயக்குமார் இன்னும் நிறைய விஷயங்கள் கசியும் என்றும்,அதில் நிறைய பேர் சிக்குவார்கள் என்றும்,ஆர்பி உதயகுமார் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க . தயாரா? என்றும்கூறினார்.பேட்டியின் போது மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார்,தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜகோபால்,
ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் பாலு,ஆகியோர் உடன் இருந்தனர்.