சுதந்திர இந்தியாவில் , தலித் மக்களுக்கான சுதந்திரம் இல்லை .,இந்திய குடியரசு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பேச்சு ...

சுதந்திர இந்தியாவில் , தலித் மக்களுக்கான சுதந்திரம் இல்லை ,.
இந்திய குடியரசு கட்சியின் மாநில நிர்வாகக்குழு   உறுப்பினர் பேச்சு ...

                   டி. ரவி  
மாநில நிர்வாகக்குழு  உறுப்பினர் 
     இந்திய குடியரசு கட்சி

ராணிப்பேட்டை மாவட்டம் இந்திய குடியரசு கட்சியின்  மாநில நிர்வாகக்குழு  உறுப்பினர்
 டி.ரவி  75வது சுதந்திர தின விழாவையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு  3 வட்டமேசை மாநாடுகள் நடைபெற்றது  இந்த மூன்று மாநாட்டிலும்  தாத்தா இரட்டைமலை சீனிவாசன்,  அண்ணல் டாக்டர் பி ஆர். அம்பேத்கர் ஆகியோர் 

 இந்தியாவில் நடைபெறும் தீண்டாமை கொடுமைகளை பிரிட்டிஷ் அரசிடம்  எடுத்துரைத்தார்கள் ஆனால் அன்று முதல் இன்று வரை தீண்டாமை கொடுமை தொடர்கின்றது 
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் பவளவிழா நிறைவு பெற்ற நிலையிலும்   இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில்  பட்டியல் இன மக்கள் வசிக்கும் பல பகுதிகளில்,தீண்டாமைக் கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன அவர்கள் வசிக்கும்

 வீடுகளுக்கு  வீட்டு மனை பட்டா கிடையாது, கிராமங்களுக்கு சாலை வசதி கிடையாது, சுடுகாட்டு வசதி கிடையாது, மயான பாதை கிடையாது,பேரூந்து வசதி கிடையாது,தெரு விளக்கு இல்லை,ரேஷன் கடைகள் இல்லை,  இந்துக்கள், பட்டியல் இன மக்களை சமமாக நடத்துவது கிடையாது,

 சேரிக்கு ஒரு சுடுகாடு,சாதி இந்துக்கள் வசிக்கும் பகுதிக்கு ஒரு சுடுகாடு, பல ஊர்களில் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை பட்ட பகலில் நடு வீதியில் படுகொலை செய்கின்றனர்,பல கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை,பட்டியல் வகுப்பை சார்ந்தவர்கள் பஞ்சாயத்து தலைவரானாலும் அவர்கள் பெரும்பாலான இடங்களில் எந்த மக்கள் பணியும் செய்ய விடாமல் புறக்கணிக்கப்பட்டு சாதி ரீதியாக  அவமதிப்பு செய்து அவர்களை கீழே உட்கார வைக்கின்றனர், 

இந்தியா தலித் மக்களுக்கான  சுதந்திரம் மறுக்கப்பட்டு  தீண்டாமை கொடுமைகள் அதிகரித்து வருவது தொடர் கதையாகி விட்டது பொது உடமை கட்சிகளை தவிற எந்த அரசியல் கட்சிகளும் தலித் மக்களுக்காக குரல் கொடுப்பது இல்லை, தமிழ்நாட்டில் 1987 ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் தலித் மக்களின் பத்தாயிரம் வீடுகளையும், வீட்டில் உள்ள பொருட்கள் கல்வி சான்றிதழ்கள் அனைத்தையும் தீ வைத்து கொளுத்தினார்கள்,

ஒரு படி நெல் கூலி கேட்டதற்க்காக 44 பேரை ஒரே வீட்டில் வைத்து தீ வைத்து கொளுத்தினார்கள்,தீ வைத்து கொளுத்திய சாதி வெறியர்களுக்கு  அரசு தண்டனை கொடுத்ததா? இல்லை, அவர்களை விடுதலை செய்தது இந்த அரசு,அன்று முதல் இன்று வரை தலித் மக்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லை
சுதந்திரமும் இல்லை தலித் மக்களைப் பாதுகாப்பதில் இந்திய அரசு மாநிலங்களின் அரசு 
சட்டத்தை கடுமையாக்க  வேண்டும் இது போன்ற சம்பவங்களுக்கு தீர்வு கான வேண்டும்,இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் சட்ட மன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தந்த அரசியல் கட்சிகளின் கொத்தடிமைகளாக செயல் படுகின்றனர்,

சுயநலவாதிகளாக இருக்கின்றனர்  இவர்களால் சமூகத்திற்கு எந்த பயனும் இல்லை.
ஆங்கிலேயர்கள் தலித் மக்களுக்கு கொடுத்த 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி தரிசு நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ள பெரும் முதலாளிகளுக்கு அரசாங்கம் துணை போகிறது,தற்போது தலித் இளைஞர்கள் மிகவும் தெளிவான அரசியலை முன்னெடுக்கின்றனர் தற்போது  முன்னாள் திமுக மத்திய அமைச்சரும், முன்னாள் வன்னியர் சங்க தலைவருமான ஜெகத்ரட்சகன்  திண்டிவனம் விழுப்புரம்  நெடுஞ்சாலையில் 150 ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமித்து கல்லூரி கட்டி வரும் பஞ்சமி நிலத்தை மீட்டு தலித் மக்களுக்கு ஒப்படைக்கக் கோரி அவர் மீது விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் கொடுக்கபட்டுள்ளது

ஆனால் விழுப்புரம் ஆட்சியர் வழக்கம் போல் எந்த நடவடிகையும் எடுக்கவில்லை,பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளை காவல் துறை மிரட்டுகின்றது.
உண்மையான சுதந்திர  
பட்டியல் இன மக்களுக்கு இதுநாள் வரையிலும் கேள்விக்குறியாகவே இருக்கிறது பட்டியல் இனத்தைச் சார்ந்த, தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் நமக்கான சுதந்திரம் பெறும் வரை ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் இவ்வாறு அவர் பேசினார்.

செய்தி வெளியீட்டாளர் தமிழர் களம் மாத இதழ்  ஆசிரியர் ம .தேவன் 

Previous Post Next Post