குன்றத்தூரில் சுதந்திர தினத்தன்று மூவர்ணக் கொடி ஏற்ற அனுமதி கோரிவந்த
பாஜகவினரை நகராட்சி அலுவலகத்தில் இருந்து விரட்டியடித்த திமுகவினரால் பெரும் பரபரப்பு- போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்படாததால் மோதல் போக்கிற்கு வழிவகைத்ததாக பாஜகவினர் குற்றச்சாட்டு...
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே சுதந்திர தினத்தன்று பாஜக சார்பில் மூவர்ணக் கொடி ஏற்ற அனுமதி கூறினர் இதற்கு வருவாய்த்துறை காவல்துறை மற்றும் உள்ளாட்சி துறை என அனைத்து தரப்பினரும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நகராட்சி முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தை அடுத்து மாற்று இடம் வழங்குவது குறித்து ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் சைலேந்திரன் தலைமையில் வட்டாட்சியர் கல்யாண சுந்தரம் உள்ளிட்ட வருவாய் துறையினர்.பல்லாவரம் உதவி ஆணையர் ,குன்றத்தூர் ஆய்வாளர் சந்துரு உள்ளிட்ட காவல் துறையினர்,நகராட்சி ஆணையர் தாமோதரன் உள்ளிட்ட உள்ளாட்சி துறையினர் உள்ளிட்டோரியுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது இதற்கிடையில் இது குறித்து செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது இதுதான் சமயம் என்று அங்கு குவிந்திருந்த திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருமையில் பேசி செய்தியாளர்களை நகராட்சியில் இருந்து வெளியேற்றினர் தொடர்ந்து நகராட்சி வளாகத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பாஜகவினரை அடித்து வெளியே துரத்தினர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அசாதாரணமான சூழல் ஏற்படும் என அறிந்தும் போதிய போலீஸ் பாதுகாப்பு போடாததால் இருதரப்பினரிடையே நகராட்சி வளாகத்திற்குள் கைகலப்பு ஏற்பட்டது காவல்துறையினர் முன்னிலையில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பாஜகவினரை ஒறுமையில் பேசி திமுகவினர் விரட்டியடித்தனர் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அரசு அலுவலர்களுடன் பாஜகவினர் ஈடுபட்டிருந்தபோது போதிய போலீஸ் பாதுகாப்பு போடாமல் திமுகவினர் தான்தோனியாக 50க்கும் மேற்பட்டோர் நகராட்சியில் குவித்து அராஜகத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது..