ஆற்காடு நகர காவல் நிலையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பிரமுகர் புகார்.

ஆற்காடு நகர காவல் நிலையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பிரமுகர் புகார்.

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில்  வசித்து வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முக்கிய பிரமுகர் 
எச்.முஹம்மத் உசேன் வயது 26 என்பவர் இவர்  நேற்று ஆற்காடு நகர காவல் நிலையத்தில்  ஆய்வாளர் விநாயகமூர்த்தியிடம்  புகார் மனு அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது
  
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துனை தலைவரும்
மற்றும்  தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைவர்  எம்.
அப்துல் ரஹ்மான் எக்ஸ். எம்பி பற்றி  
  கடந்த 14.08.2022 அன்று ஆதன் தமிழ்
இனைய தளத்தில்  மாதேஸ்வரன்  கேள்விக்கு பதில்  அளித்த தடா
ரஹீம் என்பவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குறித்தும்  தமிழ்நாடு  வஃக்பு வாரிய
தலைவர் அப்துல் ரஹ்மானை குறித்தும் பேசியபோது அப்துல் ரஹ்மான்   யாரிடமே ஐம்பது
லட்சம் பணம்  பெற்றுக் கொண்டு வஃக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தை ஒரு பெரிய
பணக்காரருக்கு கொடுத்தாக அவதூராக  பேசியது

 சமூக வலைதளங்களில் பேஸ்புக், யூடியூப் சேனல், வாட்ஸ்அப் போன்ற வலை தளங்களில் பரவி வருகிறது.
இந்த அவதுறான கருத்தை கூறிய தடா ரஹீம்  இஸ்லாமிய
சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர்  தனக்கு ஒரு அங்கிகாரம் வேண்டும் என்பதற்காக பெரிய
தலைவரை பற்றி பேசினால் தன்னுடைய பெயரும் ஊடகங்களிலும் பொது மக்கள்
மத்தியிலும் பிரபலம் அடையலாம் என்று பகல் கணவு கான்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்

 அப்துல் ரகுமான்  வஃக்பு வாரிய தலைவராக பதவி ஏற்ற
பிறகு தமிழ் நாட்டில்  ஆக்கிரமிக்கப்பட்ட வஃக்பு வாரிய சொத்துகளை மீட்டு
எடுப்பதில் மிகுந்த அக்கறை கொண்டார் குறிப்பாக திண்டுக்கல் பேகம்பூர்,
தூத்துக்குடி, நாகூர், நாகப்பட்டினம், விழப்புரம் மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்டம்,
ஆகிய பகுதிகளில் ஏறகுறைய 560 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள்
 மீட்டக்பட்டுள்ளது

 அப்படிபட்ட ஒரு தலைவரை பற்றி ஒரு விலாசம் தெரியாத நபர்
பேசுவது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது.
வஃக்பு வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் சாஹிப்
அவர்கள் இயற்கையிலையே மிகவும் வசதிபடைத்தவர் தான் நாடாளுமன்ற
உறுப்பினராக இருந்த போது கிடைத்திட்ட எம்.பி. சம்பளம் உட்பட தனக்கு கிடைத்ட்ட
அனைத்து வருவாயையும் நம்முடைய சமூதாயத்திற்காக அப்படியே வாரிவழங்கிய
வள்ளல் என்பது நம் தாய் சபை உறுப்பினர்களுக்கு தெரியும்.
மேலும் பொது வாழ்கையில் நேர்மை பேச்சுவார்தையில் மற்றவர்களின்
கறை படையாத கரத்துக்கு
மனதை நோகாமல் பேசுவதில் வல்லமைமிக்கவர்

 அப்படிபட்ட உத்தமரைப்பற்றி  தடா ரஹீம் ஒருமையில்
பேசி அவருடைய புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளது என் போன்ற லட்சோப
லட்ச இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தொண்டர்களுக்கு மன வருதத்தையும்
மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளதால் மேற்படி தடா ரஹீம் மீது 
சட்டபடி வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
Previous Post Next Post