ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியத்திற்குட்பட்ட அரும்பாக்கம் கிராமம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி கெங்கையம்மன் கோயில் தெரு அடுத்த நடுத்தெருவில் சமீபத்தில் பெய்து வரும் தொடர் மழையால் குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் புகுந்தது, இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்

குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

 ராணிப்பேட்டை மாவட்டம் 
ஆற்காடு ஒன்றியத்திற்குட்பட்ட அரும்பாக்கம் கிராமம்  ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி  கெங்கையம்மன் கோயில் தெரு அடுத்த நடுத்தெருவில்  சமீபத்தில் பெய்து  வரும்  தொடர்  மழையால் குடியிருப்பு பகுதியில்  வெள்ளநீர்  புகுந்தது, இதனால்   பொதுமக்கள்  மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்


 தெருப் பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி சேறும்  சகதியுமாக காட்சியளிக்கிறது
இதுகுறித்து அங்குள்ள பொதுமக்கள் கருத்து தெரிவித்த போது மழைநீர் தேங்கி நிற்பதால்   
 வீடுகளுக்குள் இரவு நேரங்களில்  பாம்பு, தேள், தவளை, பூரான் போன்ற விஷப்பூச்சிகள் புகுந்து கடித்து விடுதாகவும் தேங்கி நிற்கும் மழை நீர் துர்நாற்றம் வீசி வருதாக கூறுகின்றனர்

 மேலும்   கொசுக்கள் உற்பத்தி அதிகமாகிவிட்டது கொசுக்கடி தாங்க முடியவில்லை,சரியா தூங்க முடியவில்லை, இதனால்   எங்களுக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விச காய்ச்சல்,  மலேரியா, டைபாய்டு, டெங்கு காய்ச்சல், வாந்தி, பேதி போன்ற நோய்கள் ஏற்படும் அபாய நிலை   ஏற்பட்டுள்ளது,தெருக்களில் சேறும் சகதியுமாக இருப்பதால் நடக்க முடியவில்லை, ஆடுமாடுகள் கட்டி வைப்பதற்கு இடம் இல்லை என்றனர்.

மேலும் அவர்கள் பேசியபோது    
மழைநீரை வெளியேற்ற அரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கெங்கப்பன்,துணைத் தலைவர் மணிகண்டன்   மற்றும் வார்டு உறுப்பினர்கள், வி.ராமன் மற்றும் வி.அருள் ஆகியோருக்கு முறையாக  தகவல் தெரிவித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று  குற்றம் சாட்டினர்

 மேலும் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வடி நீர் கால்வாய் மற்றும் சாலை அமைத்து தரவும்,தற்போது தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவும்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Previous Post Next Post