குலதெய்வம் கோயில் கட்டி வழிபட அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் டீ புதூர் ஆதிதிராவிட பொதுமக்கள் மனு
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் திமிரி அடுத்த டீ புதூர் கிராம ஆதிதிராவிட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது நாங்கள் டீ புதூர் கிராமத்தில் வசித்து வருகிறோம் எங்கள் கிராம மேற்குப்பகுதியில் மலை உள்ளது
அந்த மலைக்கு எதிரே சுமார் 130 வருடங்களுக்கு முன்பாக எங்கள் முன்னோர்கள் குடியிருந்து வந்தனர் அந்த இடத்தில் எங்கள் குல தெய்வமான முனீஸ்வரனை வழிபட்டு வந்துள்ளனர் அதனைத் தொடர்ந்து நாங்களும் குலதெய்வ வழிபாடு செய்து வருகிறோம்
எனவே அந்த இடத்தில் எங்கள் குல தெய்வமான முனீஸ்வரருக்கு கோயில் கட்டி சிலை வைத்து வழிபாடு செய்வதற்கு அந்த இடத்தை எங்களுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது