ராணிப்பேட்டை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம்
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில்
ராணிப்பேட்டை சந்த மேடு அருகே உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு முன்பாக மாவட்ட சங்க செயலாளர் டாக்டர் சுரேஷ் பாபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது துணைத்தலைவர் டாக்டர் வேலூ ரங்கநாதன், மாவட்ட பொருளாளர் டாக்டர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
டாக்டர் வெங்கடேஸ்வரன் பேசுகையில்
மருத்துவத் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி திடீரென்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களின் பணி நேரத்தை மாற்றி அறிவித்திருப்பது மருத்துவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது பணி நேர அரசாணை வெளியீடு வதற்கு முன்பாக முறையாக மருத்துவ குழுவை கூட்டி ஆலோசனை செய்த பிறகு பணி நேரம் மாற்றம் குறித்து அறிவித்திருக்க வேண்டும்
ஆனால் யாருக்குமே தெரியாமல் திடீரென்று பணி நேரத்தை மாற்றி அரசாணை வெளியிட்டு இருப்பது மருத்துவர்களின் உரிமைகளை நசுக்கும் போக்காகும் அரசாணை 339-ன் படி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் காலை 9 மணிக்கு சென்று மாலை 5 மணி வரையிலும் பணி செய்ய வேண்டும்
ஆனால் இப்பொழுது இதனை மாற்றி புதிய அரசாணை 225 தின் படி
காலை 8 மணிக்கு சென்று மாலை 5 மணி வரை பணியாற்ற வேண்டும் என்று அரசாணை வெளியிட்டிருப்பது
வருத்தத்துக்குரியது கிராம சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் அரசு வெளியிட்டிருக்கும் பணி நேரத்தை கடைபிடிப்பது கடினமாகும்
எனவே தமிழக அரசு புதிய அரசாணை 225 ஐ, ரத்து செய்து பழைய அரசாணை 339 ஐ, நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார் இவ்வாறு அவர் பேசினார்.