திண்டிவனம் அருகே ஓடும் பேருந்தில்
குளிர்பானம் குடித்துவிட்டு பஸ்சில் வந்த பள்ளி மாணவர் உயிரிழப்பு.
திண்டிவனம்
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சென்னைக்கு சென்ற பேருந்தில் பயணம் செய்த(14) வயது பள்ளி மாணவர் திண்டிவனம் வந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை மயிலாப்பூர் பிவி கோவில் தெருவை சேர்ந்த ஜெபஸ்டின் ராஜ் மகன் ஆண்டானி ஜான் ரோஷன் வயது (14) இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார் இந்நிலையில் குடும்பத்தாருடன் சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் திருவிழாவுக்காக தாய் பொற்செல்வி (36) சகோதரி ஏஞ்சலின் செல்வ அனுசியா(16) உடன் சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் திருவிழாக்கு சென்று முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு அரசு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்
அழகாபுரி பேருந்து நிலையம் அருகே சாலையோரம் பயணியர் உணவகத்தில் பேருந்து நின்ற போது அங்கிருந்து ஒரு கடையில் சிப்ஸ் மற்றும் பாட்டில் குடிநீர் குளிர்பானம் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது இதனை சாப்பிட்ட மாணவர் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார் தாயும் சகோதரியும் தன் குடும்பத்தில் பேருந்தில் பயணம் செய்தால் இயல்பாகவே வாந்தி மயக்கும் வருமென அவருக்கு தண்ணீர் கொடுத்து உறங்க வைத்துள்ளனர்.
பிறகு மீண்டும் ஜான் ரோஷன் தொடர்ச்சியாக வாந்தி எடுத்துள்ளார்
ஜான் ரோஷன் தூங்கிவிட்டால் சரியாவிடம் என நினைத்த தாய் பொற் செல்வி பின்னால் இருக்கையில் ஜான் ரோசனை உறங்க வைத்துள்ளார் விழுப்புரத்திலிருந்து விக்கிரவாண்டி அருகே சாலை ஓர பயணியர் உணவகத்தில் பேருந்து வந்த போது சிறுவனை தாய் பொற் செல்வி தேநீர் அருந்த எழுப்பி உள்ளார் எந்த வித சுயநினைவு மின்றி சிறுவன் இருந்துள்ளார்
பின்பு முகத்தில் தண்ணி அடித்து எழுப்பிய போது இரண்டு முறை பெரும் மூச்சு விட்டதாகவும் வேறு எந்தவித அசுவும் இல்லாததால் சந்தேகம் அடைந்த தாய் மற்றும் சகோதரி பேருந்தில் கதறி அழுதனர் இதனை அறிந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்து ஓரமாக நிறுத்திவிட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர் பஸ்ஸில் இருந்தவர்கள் சிறுவனுக்கு முதலுதவி செய்திருக்கிறார்கள் பஸ் டிரைவர் உடனடியாக பஸ்ஸை எடுத்துக் கொண்டு திண்டிவனம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி 108 ஆம் புலன்ஸ்க்குதொடர்பு கொண்டுள்ளார்கள் ஆம்புலன்ஸ் மூலமாக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் அப்போது மருத்துவர்கள் சிறுவனை பரிசோதனை செய்து பார்க்கும்போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார் கள்
தகவல் அறிந்த திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தனி பிரிவு ஆதி ஆகியோர் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று பேருந்தில் வந்த சிறுவன் எந்த காரணத்தால் இறந்தார் என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.
குளிர்பானம் மற்றும் சிப்ஸ் சாப்பிட்டதால் புட்பாய்சன் ஏற்பட்டு மாணவன் இருந்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்துகின்றனர் மாணவனின் சடலத்தைப் பார்த்து தாய் மற்றும் சகோதரி கதறி அழுத சம்பவம் இங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
ஓடும் பேருந்தில் பள்ளி மாணவன் மர்மமான முறையில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.