செய்திக் குறிப்பு
இடம்: திருவாரூர் நாள்:09.10.2023
காவிரி நீர் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்கிறேன்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும் எனகர்நாடக அரசை தீர்மானம் மூலம் வலியுறுத்தியிருக்க வேண்டும்.
பிஆர்.பாண்டியன்
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை கருகி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்
சுமார் 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணி துவங்க முடியாத நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதுவரையிலும் டெல்டா மாவட்டங்களில் இப்படியொரு நெருக்கடியை சந்தித்த அனுபவம் இல்லை.காரணம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் பச்சத்தில் ஒருபோக சம்பா மட்டும் மேற்கொண்டு வடகிழக்கு பருவமழைய நம்பி சாகுபடி பாதுகாத்திருக்க முடியும்.இந்த ஆண்டு குறுவையும் பாதித்து சம்பாவும் சாகுபடி துவங்க முடியாது நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாடு அரசு உரிய காலத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய தண்ணீரை மாதாந்திர அடிப்படையில் பெற்று இருக்க வேண்டும்.
இந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தண்ணீரை மத்திய அரசு பெற்று தர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை வரவேற்கிறோம். தமிழக விவசாயிகள் பாதிப்பை கருத்தில் கொண்டு ஆணையத்தின் உத்தரவை உடன் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்க வேண்டும். அது கர்நாடக அரசிற்கும் பயனாக இருந்திருக்கும்.
கர்நாடக மாநில அரசை பின்பற்றி தமிழ்நாடு அரசும் உள்நோக்கமின்றி அரசியல் பாகுபாடு இன்றி காவிரி பிரச்சினையை அனுகுவதற்கு இனிமேலாவது முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மேற்கண்டவாறு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர்
பிஆர் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதனை தங்கள் ஊடகம் பத்திரிகைகளில் வெளியிட்டு உதவிட அன்புடன் வேண்டுகிறேன்.
இவன் :
என் மணிமாறன், செய்தி தொடர்பாளர்.