காவிரி நீர் தர மறுத்தால் நெய்வேலி மின்சாரத்தை தடுப்போம்கர்நாடக அரசை கண்டித்து நவம்பர் 15 ல் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் முற்றுகைபிஆர்.பாண்டியன் அறிவிப்பு

பத்திரிக்கை ஊடக செய்தியாளர்கள் சந்திப்பு 
இடம்.மன்னார்குடி நாள்:10.10.2023

காவிரி நீர் தர மறுத்தால் நெய்வேலி மின்சாரத்தை தடுப்போம்
கர்நாடக அரசை கண்டித்து நவம்பர் 15 ல் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் முற்றுகை
பிஆர்.பாண்டியன் அறிவிப்பு
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவசரக் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட தலைவர் குடவாசல் சரவணன் தலைமையேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் தெரிவித்ததாவது: 

தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் குறுவை 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு 3.50 லட்சம் ஏக்கரில் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் முறையான கணக்கெடுப்பு நடத்தி ஏக்கர் 1 க்கு ரூ 35 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும். 

நிலத்தடி நீரை பயன்படுத்தி முடிந்த வரையிலும் சம்பா சாகுபடி தொடர்வதற்கு இலவச மின்சார இணைப்புகளை தடையின்றி வழங்க வேண்டும். 1.50 லட்சம் சிறப்பு ஒதுக்கீட்டில் வழங்கப்படும் மின் இணைப்புகள் கூட பல இடங்களில் காவிரி டெல்டாவில் இணைப்பு வழங்காமல் உபகரணங்கள் தட்டுப்பாட்டால் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளது. 

3 Al கட்டணம் செலுத்தியவர்கள் கூட மின் இணைப்பு பெற இயலாத நிலையில் தொடர்கிறது. முன்னுரிமை கொடுத்து அனைவருக்கும் மின் இணைப்பு வழங்குவதோடு, நிலத்தடி நீரை பயன்படுத்த வாய்ப்புள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனை இல்லாமல் உடனடியாக இலவச மின் இணைப்பு சிறப்பு ஒதுக்கீட்டில் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற முடியாத நிலையில் விவசாயிகள் பணிதவித்து வருகிறார்கள். கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்கிற பெயரால் வங்கிகள் மூடப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதை தடுத்து நிறுத்தும் உள்நோக்கத்தோடு போராட்டத்தை பேச்சுவார்த்தை நடத்தாமல் காலம் கடத்தப்படுகிறதோ?. என்று அஞ்ச தோன்றுகிறது. உடனடியாக கூட்டுறவு வங்கிகள் செயல்பட தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் விவசாயிகளுக்கு விரோதமான நடவடிக்கைகளை தட்டிக் கேட்கும்  விவசாய சங்க தலைவர்கள் மீது அவதூறு பிரச்சாரங்களை இணையதளங்களில் வெளியிடுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இதனை தடுத்து நிறுத்த முதலமைச்சர் முன்வர வேண்டும்.தனிநபர் விமர்சனங்கள் தீவிர
மடையுமேயானால் அதனை எதிர்த்து விவசாயிகள் களமிறங்க நேரிடும்.  

இந்த நிலையில்கர்நாடக அரசு வலியுறுத்தியும் சட்டவிரோதமாக தண்ணீர் தர மறுப்பதை கண்டிக்காமல் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்துள்ள தீர்மானம் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. 

கர்நாடகா துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் தண்ணீரை தரமாட்டேன் என்று இன்றைக்கு பகிரங்கமாக தீர்மானம் நிறைவேற்ற முன்வந்திருப்பது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்படுத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றத்திலும் கர்நாடக அரசின் மீது வலிமையான எதிர் கருத்துக்களை முன்வைப்பதற்கான வகையில் சட்டமன்ற தீர்மானம் அமையாமல் போய்விட்டது என்கிற அச்சம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. 

காவிரியில் தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசிற்கு மின்சாரத்தை வழங்காதே, நெய்வேலி மின்சாரத்தை தடுத்து நிறுத்து தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழ்நாட்டிற்கே என்கிற கோஷத்தை முன்வைத்து நெய்வேலி சுரங்கத்தை வரும் நவம்பர் 15ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். பல ஆயிரக்கணக்கான விவசாயிகள். சுரங்க தொழிலாளர்கள் இப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என்றார்.

மாநிலத் தலைவர் 
எல்.பழனியப்பன்
துணைத் தலைவர் பயரி எம்.கிருஷ்ணமணி, துணைச் செயலாளர் எம் செந்தில்குமார், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் எம் மணி,தலைவர் 
விஎஸ்.வீரப்பன்.
வடக்கு மாவட்ட செயலாளர் பாட்ஷா ரவி,  நாகப்பட்டினம் மாவட்டதலைவர் பாலசுப்ரமணியன் செயலாளர் கமல்ராம் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளர் கணேஷ், மன்னார்குடி ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ்,நகர தலைவர் தங்கமணி. செயலாளர் போஸ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கு கொண்டனர். 

இதனை தங்கள் ஊடகம் பத்திரிகையில் வெளியிட்டு உதவிட வேண்டுகிறேன். 

இவன் :
என் மணிமாறன் செய்தி தொடர்பாளர்
Previous Post Next Post