மன்னார்குடியில் 100 பவுன் நகை திருட்டு போனதாக நாடகமாடிய பெண் சிறையில் அடைப்பு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரம் நெடுவாக்கோட்டை மகாலெட்சுமி நகரில் வசிக்கும் லாவன்யா மற்றும் அருணாச்சலம் தம்பதினர் கடந்த 28.09.2023 அன்று தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு நீடாமங்கலம் அருகில் உள்ள சோனாப்பேட்டை கிராமத்திற்கு சென்று தங்கியுள்ளனர் . மறுநாள் 29.09.2023-ம் தேதி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த 100 பவுன் தங்க நகைகள் உட்பட வெள்ளி பொருட்களும் திருட்டு போனதாக மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . லாவன்யா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வந்தது அதனை தொடர்ந்து மன்னார்குடி நகர காவல்துறையினர் தனிப்படை அமைத்து திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அருணாச்சலம் வீட்டில் நகைகளை கொள்ளையடித்ததாக
பிரபாகரன் வீரன் கோயில் தெரு குமந்தன் மேடு பாண்டிச்சேரி,
ராஜ்மோகன் கணபதி பிள்ளை தெரு, T. R. பட்டினம் காரைக்கால்,
முத்து ஆனந்த் மெயின் ரோடு வடுவூரை சேர்ந்த ஆகிய 3 பேரையும் தனிப்படையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த 3 பேரும் அருணாச்சலம் வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது நாங்கள் தான் எனவும் ஆனால் 2 பவுன் நகை, ஒரு வெள்ளி விளக்கு, 2 செல்போன்கள் மட்டுமே கொள்ளையடித்தோம் என ஒப்புகொண்டனர்.
இதனையடுத்து அருணாச்சலம் மனைவி லாவண்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தியத்தில், அவர் திருடப்பட்டதாக சொன்ன 100 பவுன் திருட்டுபோனதாக பொய்யாக கூறி 50 பவுன் நகைகளை வீட்டில் மறைத்து வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார்.
லாவன்யா காவல்துறையினரை உள்நோக்கத்துடன் வேண்டுமேன்றே ஏமாற்றி அலைகழித்தது விசாரனையில் தெரிய வந்ததால் அவர் மீது மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் .
குறிப்பு . குற்றவாளிகள் புகைபடங்கள் பெயரின் அடிப்படையில் முறையக அடுக்கிவைக்கபட்டுள்ளது .