தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை வழங்காத கர்நாடகா அரசை கண்டித்து குடவாசல் பேருந்து நிலையம் அருகே குடவாசல் வாழ் பொதுமக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமலும், காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் பங்கிட்டு முழு அளவையும் வழங்காததை கண்டித்தும் டெல்டாவில் கருகும் குறுவை பயிரை காக்கவும், சம்பா பயிரை தொடர உடனடியாக காவிரி ஆணையம் உத்தரவுட்டுள்ள நீரை உடனே வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குடவாசல் வாழ் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக குடவாசல் பேருந்து நிலைய அருகே குடவாசல் பகுதி வாழ் பொதுமக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அ தி முக மாவட்ட கவுன்சிலர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் பாப்பா. சுப்பிரமணியன், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் M. R.தென்கோவன் பேரூராட்சி முன்னாள் துணைப் பெருத்தலைவர் M. R. அரசன்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் அரசூர் சரவணன் உள்ளிட்ட விவசாய குழுக்கள் மற்றும், தேசிய காங்கிரஸ் வட்டார தலைவர் முனியய்யா, தி மு க பொறுப்பாளர்கள் பா ஜ க நகர தலைவர் சேதுபதி, SDPI மாவட்ட தலைவர் முபாரக் அலி,விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் பால். கிட்டு, அ ம மு க நகர செயலாளர் ஆரோக்கியா ஆனந்த்,நாம் தமிழர் மற்றும் லாரி, ஆட்டோ, லோடு ஆட்டோ, கார், வேன், ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் SYPI மாணவ, மாணவி அமைப்பினர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் பெரும் விவசாயி மூலங்குடி அசோகன், குடவாசல் பேரூராட்சி துணைத்தலைவர் குணசேகரன் உள்ளிட்ட மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏராளமனோர் பங்கேற்று வரலாற்று சிறப்பு மிக்க கண்டன ஆர்ப்பாட்டதை மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.