கோட்டூர் அருகே ஓன்ஜிசி குழாயில் வால்வு பகுதி உடைபட்டு கேஸ் வெளியேற்றம் . மூன்று நாட்களில் உடைப்பு சரிசெய்யபடும் அதிகாரி தகவல் .
திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் இராட்சத துரப்பன இயந்திரம் மூலம் பூமிக்கடியில் பல ஆயிரம் மீட்டர் துளையிட்டு கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. அந்த வகையில் இம்மாவட்டத்தில் அடியக்கமங்கலம், கருப்பூர், திருமதிக்குன்னம், எருக்காட்டூர், பாரதிமூலங்குடி, கோட்டூர், களப்பால் முதலான சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து கச்சா எண்ணெய்யினை எடுத்து வருகிறது. அந்தந்த பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் வயல்வெளி வழியாகவும், சாலையோரமாகவும் ராட்சத குழாய்கள் அமைத்து அதன் மூலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சேமிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது . அதன் ஒரு பகுதியான திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே காரியமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் இரண்டு எண்ணெய் கிணறுகள் அமைத்து எண்ணெய் மற்று கேஸ் எடுத்து வந்தனர் இந்நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் பணிகள் நிறைவடைந்து இரண்டு எண்ணெய் கிணறுகளும் மூடப்பட்டன .இந்த நிலையில் மூடப்பட்ட எண்ணை கிணற்றிலிருந்து செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கேஸ் வெளியேறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதால் உடனடியாக ஓஎன்ஜிசி நிர்வாக துறை அதிகாரிகள் உடனடியாக கேஸ் வெளியேறும் பகுதியினை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஓ.என்.சிஜி அதிகாரிகள் கூறுகையில் பொதுமக்கள் இடையூறுகளினால் குழாயில் சிறிதளவு வால்வு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது இதனை ஒ.என்.சிஜி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தார்கள் மக்களுக்கு எந்த வித பாதிப்பு இல்லாமல் குழாய்களை மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஒஎன்சிஜி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார் அதன் அடைப்படையில் மாசுகட்டுபாட்டு வாரியம் , வருவாய் கோட்டாட்சியர் அனுமதியுடன் நாளை முதல் மூன்று தினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் குழாய் உடைப்பை சரி செய்யப்படும் என தெரிவித்தனர் .
FILE NAME : MANNARGUDI ONGC PIPE DAMAGE NEWS 08.10.2023