ஒன்றியத்தில் ஆண்டு கொண்டு இருக்கிற பாரதிய ஜனதா கட்சி திருவிழா கூட்டத்தின் திருடர்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருத்துறைப்பூண்டியில் பேச்சு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விவசாயிகளின் உரிமைக்காக போராடிய பொதுவுடமை போராளி பி.சீனிவாசராவ் 62 வது நினைவு தின பொதுக்கூட்டம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா .முத்தரசன் தலைமையில் நடைபெற்றது இதில் சி.பி.எம். மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம் .எல்.ஏ. பாலபாரதி, சட்டமன்ற உறுப்பினர் கே.மாரிமுத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பழனிச்சாமி, வை. சிவபுண்ணியம், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில , மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் அதனை தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில் ஒன்றியத்தில் ஆண்டு கொண்டு இருக்கிற கட்சி பாரதிய ஜனதா கட்சி திருவிழா கூட்டத்தின் திருடர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மோடியாக இருக்கட்டும் அமித்ஷாவாக இருக்கட்டும் இவர்கள் திருவிழா கூட்டத்தின் திருடர்கள் திருவிழா கூட்டத்தில் திருடர்கள் மக்களிடம் ஜெயினை பறித்து கொண்டு .அதோ ஒடுகிறான் இதோ ஒடுகிறான் என்று திருடன் தப்பித்து விடுவான் ஆனால் ஜெயினை பறிகொடுத்தவர்கள் பதற்றமடைவார்கள் அப்படி பட்ட திருட்டு அயோக்கியத்தனமான கூட்டம் தான் டெல்லியில் ஆண்டு கொண்டிருக்கிறது. அன்மையில் ஒரு திட்டம் அறிவித்திருந்தார்கள் அது நல்ல திட்டம் எல்லோருக்கு ரூ 1 லட்சம் கடன் அடுத்த வருடம் 18 தொழிலுக்கு ரூ 5 இலட்சம் கடன் செருப்பு தைப்பவர்கள் , மட்பாண்டம் செய்பவர்கள் , தையல் தொழிலாளர்கள் , முடிவெட்டுபவர்கள் , சலவை தொழிலாளர்கள் என்று 18 தொழிலுக்கு கடன் என அறிவித்து விட்டு தொழிலை முன்னேற்றமடைய அல்ல அந்த வீட்டில் 18 வயதுடைய இளைஞன் அந்த தொழிலை செய்யவதற்கு தான் இந்த கடன் முடிவெட்டுபவன் , சலவை தொழிலில் ஈடுபடுபவன் அந்த தொழிலை மட்டும்தான் செய்வதற்காக இந்த கடன் வழங்கப்படுகிறது அவன் கல்வியறிவு பெறக்கூடாது என்பதற்காகவே இந்தக் கடனை ஒன்றிய அரசு வழங்கி குலக்கல்வி முறையை கொண்டு வருகிறது.
எங்கு பார்த்தாலும் ஊழலைப் பற்றிதான் பேசி வருகிறார்கள் ஏழரை லட்சம் ஊழல் இவையெல்லாம் மறைப்பதற்கு ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலை என அறிவித்து வருகிறார்கள் ஆகவே இந்தியா கூட்டணி என்பது கொள்கை அடிப்படையில் கூடியிருக்கிறது. சீட்டோ மற்றது அல்ல அதிமுகவை பற்றி பாலபாரதி எடுத்துரைத்தார் அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது சொல்ல முடியவில்லை ஏன் பாஜக்காவுடன் இணைந்தார்கள் ஏன் விலகினார்கள் என தெரியவில்லை தீர்மானம் போடுகிறார்கள் இனிமேல் பாஜகவுடன் சேரமாட்டோம் உறவை முறித்துக் கொண்டோம் இரண்டு நாள் சென்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி பிஜேபியை பற்றி யாரும் பேச வேண்டாம் என சொல்லி வருகிறார் அண்ணாமலை தீவிரமாக பேசிக் கொண்டு வந்தார் அவரிடம் கேட்டார்கள் அதிமுக தீர்மானம் போட்டு இருக்கிறது என்று அத பத்தி நீங்க என்ன சொல்றீங்க என்று நான் பாதயாத்திரை போய்க் கொண்டிருக்கிறேன் நான் அதைப்பற்றி ஒன்னும் சொல்ல வில்லை என அண்ணாமலை நழுவிவிட்டார் .ஆளுக்கு ஆள் பேசி வந்தார்கள் எச்.ராஜா கூட்டணி உடையவில்லை என சொல்லி வருகிறார் கூட்டணி தேர்தல் வரட்டும் கூட்டணி பற்றி பேசுவோம் என ஜெயக்குமார் கூறி வருகிறார் நம்பகத்தன்மையற்ற ஒரு கட்சி தமிழகத்தில் இருக்கிறது என்று சொன்னால் அது அதிமுக தான் என தெரிவித்தார் அதிமுக விடமும் நம்பகத்தன்மை இல்லை எந்த நேரத்தில் எப்படி முடிவு எடுப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை . தமிழகத்தில் அதிமுக ஒரு இடமோ அல்லது இரண்டு இடமோ வெற்றி பெற்றால் பிரதமர் வேட்பாளரை யார் ஆதரிப்பார்கள் மோடியை ஆதரிப்பார்களா? இந்தியா கூட்டணியை ஆதரிப்பார்களா ? மோடியை தான் ஆதரிப்பார்கள் ஆகவே இந்த மோசடிக்காரர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல என தெரிவித்தார்.