சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடான பத்திரப்பதிவு, பண முதலாளிகளுக்கு துணை போகும் அதிகாரிகள், இது வாலாஜாவில்

சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடான பத்திரப்பதிவு, பண முதலாளிகளுக்கு துணை போகும் அதிகாரிகள்,
 இது வாலாஜாவில் 


ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜாபேட்டை தமிழ்நாட்டின் முதல் நகராட்சி என்ற வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும் தென்னிந்தியாவில் முதல் ரயில் பயணம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1856 ஆம் ஆண்டு சென்னை ராயபுரத்திலிருந்து வாலாஜாபேட்டை வரை இயக்கப்பட்டுள்ளது.

 ரயில் இயக்கும் அளவுக்கு அக்காலத்தில் பிரபல வணிக நகரமாக செயல்பட்டு வந்திருக்கிறது   இப்படி வரலாற்று சிறப்புமிக்க இந்த நகரத்தில்  வழிபாட்டு ஸ்தலங்களாக பல  கோவில்கள் மற்றும்  குளங்களை  பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் 
 ஆனால் காலப்போக்கில் குடியிருப்பு பொதுமக்கள்  கோவில் குளங்களை நிலமாக்கி  ஆக்கிரமித்து அனுபவித்து வந்துள்ளனர் தற்போதும் பெரும்பாலான  இடங்களில்  அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டியுள்ளனர்
 
சமீபத்துல அரசுக்கு சொந்தமான குளம் இருந்த இடத்தை வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யும் சம்பவமும் அரங்கேறியுள்ளது   
வாலாஜாவில் பிரபல தொழிலதிபராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் எம்.ஆர்.பாலாஜி 
இவர் பாலாஜி பில்டர்ஸ் என்ற நிறுவனத்தை  நடத்தி வருகிறார் இவருக்கு சொந்தமாக திருமண மண்டபமும் உண்டு,இடங்களை தேர்வு செய்து விலைக்கு வாங்கி அதில் கட்டிடங்கள் கட்டி   விற்பனை செய்வார் இதுதான்  இவருடைய பிரதான தொழில்  எப்படிப்பட்ட சிக்கலான  இடத்தையும் வாங்கி  பதிவு செய்து பில்டிங் கட்டி தருவதில் சகலகலா வல்லவர் என்கின்றனர் அவருக்கு அறிமுகமானவர்கள் 

  எல்லா துறைகளிலும்  அதிகாரிகளை  கைக்குள் வைத்து காரியங்களை கச்சிதமா  முடிப்பதற்கு  கை தேர்ந்தவராம்
அந்த வகையில்  தான் வாலாஜா  வெற்றிலை காரத் தெருவில் வார்டு எண் 1, பிளாக் எண் 21,டவுன் சர்வே எண் 1330,     குளம், அரசுக்கு சொந்தமான இடம் என்று தெரிந்திருந்ததும்

அந்த இடத்தை 
 வாலாஜா டவுன் வெற்றிலைக்கார தெருவில் வசித்து வந்த லேட்.பெருமாள் என்பவரின் மகன்கள்  
மூர்த்தி, விநாயகம்,
சிவபிரகாசம் 
ஆகிய  மூவரிடமும்
 எம்.ஆர் பாலாஜி  
2014-ம் ஆண்டு ரூபாய்.5,50,000/-க்கு  விக்கிரையப் பத்திரம் எழுதி வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் தன்னுடைய பெயரில் பத்திரப்பதிவு செய்திருக்கிறார்

அந்த இடத்தில் கட்டிடம் கட்டி     கடந்த 2023 மே 19ஆம் தேதி காவேரிப்பாக்கம் அமீர் தெருவை சேர்ந்த ராஜி என்பவரின் மனைவி வசந்திக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்திருக்கிறார் 

இந்த சம்பவம் தொடர்பாக   மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் புகார் செய்திருந்த பாஜக பிரமுகர் சதீஷ்குமார்யிடம்  விசாரித்தபோது  வாலாஜாவில் சர்க்கார் குளம் சர்வே எண் 1330 என்று பதிவு உள்ளது நீர்நிலை என்று பதிவு இருந்தாலே பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று அரசு ஆணை உள்ளது இது தெரிந்திருந்தும் ரியல் எஸ்டேட் அதிபர் பாலாஜி சொத்தை வாங்கியும் அதை விற்றும் இருக்கிறார் இந்த செயலுக்கு அதிகாரிகளும் துணை போயிருக்கிறார்கள் இது சம்பந்தமா அதிகாரிகளிடம்  புகார் கொடுத்திருக்கிறேன் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

எம் ஆர் பாலாஜி

  தொழிலதிபர் பாலாஜியிடம் அலைபேசியில்  தொடர்பு கொண்டு பேசியபோது அவர் நம்மிடம் நான்  நிலம் வாங்கி  வீட்டுமனை போட்டு விற்கவில்லை  ஏற்கனவே 1008 பேர் இடம் வைத்திருக்கிறார்கள் நாங்கள் ஒன்றும் புதுசாக உருவாக்கவில்லை நான் வாங்கும் போது நீர்நிலை என்று தெரியாது  ஆனால்  சார்பதிவாளர்  அலுவலகத்தில் பத்திரத்தை  பதிவு செய்தனர்  ஏற்கனவே இந்த இடத்தை வைத்திருந்தவர்கள் டாக்குமெண்ட், பட்டா வைத்திருந்தார்கள் எனக்கு இந்த இடத்தை காமராஜர் டீக்கடைக்காரர் தான் கொடுத்திருக்கிறார் நான் மீட்டிங்கில் இருக்கிறேன் நேரில் வாருங்கள் பேசலாம் என்று அலைபேசியை துண்டித்துக் கொண்டார்
சப் ரிஜிஸ்டர் ஜெகன்

பாலாஜியிடம் இடம் வாங்கிய வசந்தியின்  கணவர் ராஜிடம்  பேசினோம்  நாங்கள்  நிலம்  வாங்க 
பாலாஜியிடம் பேசியபோது அவர் அந்த  இடத்தை நான் வாங்கி எப்படி பத்திர பதிவு செய்து கொண்டேனோ அதேபோல உங்களுக்கும் செய்து தருகிறேன் எந்தப் பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்


   நாங்கள் 40 லட்சம் ரூபாய் கொடுத்து  சொத்தை வாங்கினோம்  அந்த இடத்தில் கட்டிடம் இருந்தது அதில்  குழாய் இணைப்பு இருந்ததே தவிர  மின் இணைப்பு இல்லை   அந்த  இடத்திற்கு வரி செலுத்துவதற்காக   நகராட்சி சென்றபோது 
நகராட்சி அலுவலர்கள் அது நீர் நிலை புறம்போக்கு அதற்கு  வரியெல்லாம் கட்ட முடியாது என்று   திருப்பி அனுப்பி விட்டனர் அப்போதுதான் எனக்கே தெரிந்தது  அந்த இடம் நீர்நிலை குளமென்று  என்றார்

இந்த சம்பவம் குறித்து  வாலாஜா சார்  பதிவாளர் வெங்கடேசனிடம் பேசியபோது  நான் பத்திர பதிவு செய்யவில்லை   விடுமுறையில் இருந்தேன் அந்த நேரத்தில் சார் பதிவாளர் பொறுப்பில் இருந்தவர்தான் பதிவு செய்திருப்பார் அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று முடித்துக் கொண்டார்

   துணைச்சார் பதிவாளர் ஜெகனிடம்  அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்   அவர்  வாலாஜா வெத்தலை கார தெருவில் உள்ள சர்வே எண் 1330 குளம்தான் என்று எனக்கே? தெரியவில்லை நான் சரியாக கவனிக்கவும் இல்லை இது சம்பந்தமா டாக்குமெண்ட் ரைட்டரைத்தான்  கேட்க வேண்டுமென்று ஒரேயடியாகபலிட்டியடித்து பேசினார்

வாலாஜா நகராட்சி  சர்வேயர் ஆனந்த் பாபு  சொல்கிறார் சார்பதிவாளர் அலுவலகத்தில் டோக்கன் போட்ட சர்வே எண்  1336 பத்திரத்தில் இருந்த சர்வே எண் 1330 
சரியான முறையில் திட்டமிட்டு செய்திருக்கிறார்கள்  என்றார்

மாவட்ட பதிவாளர் வானியிடம் பேசினோம்   அவர்  நீர் நிலை குளம் பத்திரப்பதிவு  செய்யப்பட்டது தொடர்பாக புகார் வந்திருக்கிறது  அதன் விவரம் பைல் பார்த்து தான் சொல்ல முடியும்  மேலும்  நடவடிக்கை எடுப்பது சம்பந்தமா கேட்டபோது நீதிமன்றத்தில்   தடை உத்தரவு வாங்கியுள்ளார்கள் பிறகுதான் நடவடிக்கை சம்பந்தமா தெரியவரும் என்றார்
வெங்கடேசன் சார்பதிவாளர்

ஒரு பொய்யை மறைக்க ஒன்பது  பொய் சொன்ன கதையா 
வாங்கியவர், விற்றவர்,   எழுதி கொடுத்தவர் பத்திரப்பதிவு செய்தவர் யாருக்குமே  சொத்தின் விவரம் தெரியவில்லை  என்கிறார்கள்  அப்படியானால் இவர்களின் கண்ணை மறைத்தது எது?  அரசு விதிமுறைகளை மீறி அரசாங்க சொத்தை பத்திரப்பதிவு செய்தது எப்படி? மனசு பணத்தை விரும்பியது பணம் கண்ணை மறைத்து தன்னையும், தன் நிலையையும் மறந்து  துணை போனார்கள் அதிகாரிகள்  வென்றது பணம், விழுந்தது ஜனநாயகம் 

வாலாஜாவில் மட்டும் தானா தமிழகம் முழுவதும் பெரும்பாலான சார்பதிவாளர் அலுவலகங்களில் இதே நிலைமைதான் இது போன்ற நபர்கள் மற்றும் அதிகாரிகள் மீது    துறை சார்ந்த அமைச்சரும் முதன்மை அதிகாரிகளும்    கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின்
எதிர்பார்ப்பா இருக்கிறது.
Previous Post Next Post