திருச்சி மாவட்ட ஏஐடியுசி சாலையோர தரைக்கடை சிறுகடை வியாபாரிகள் சங்கம் மணிகண்டம் ஒன்றிய குழு சார்பில் 26.10.2023 மாலை 4.00 மணி அளவில் இரட்டைவாய்க்கால் அருகில் ஒன்றிய செயலாளர் தோழர் K. மேகராஜ் தலைமையில் நடைபெற்றது



திருச்சி மாவட்ட ஏஐடியுசி சாலையோர தரைக்கடை சிறுகடை வியாபாரிகள் சங்கம் மணிகண்டம் ஒன்றிய குழு சார்பில் 26.10.2023 மாலை 4.00 மணி அளவில் இரட்டைவாய்க்கால்  அருகில் ஒன்றிய செயலாளர் தோழர் K. மேகராஜ் தலைமையில் நடைபெற்றது
 ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் S. சிவா அவர்களும் ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவர் தோழர் C. செல்வகுமார் அவர்களும் மாவட்ட பொதுச்செயலாளர் தோழர் A .அன்சார்தீன் அவர்களும் கட்டட சங்க மாவட்ட தலைவர் தோழர் MR. முருகன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் சிபிஐ ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் S. முத்தழகு பெண்கள் சங்க துணை ஒருங்கிணைப்பாளர் தோழியர் M. மருதாம்பாள் சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் தோழியர் S .முத்துலெச்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் கட்டட சங்க தேசியக் குழு உறுப்பினர் தோழியர் D .நிர்மலா உள்ளாட்சி சங்க ஒன்றிய செயலாளர் தோழியர் J .நதியா மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தோழியர் B .வித்யா சிபிஐ ஒன்றிய குழு உறுப்பினர் தோழியர் M .ரஷ்யாபேகம் உள்ளாட்சி சங்க பொருளாளர் தோழியர் K. பாப்பாத்தி ஆட்டோ சங்க தலைவர் தோழர் S .ஆறுமுகம் மற்றும் லட்சுமி ஜெயபால் ஜெயசந்திரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கூட்டத்தில்
 தரைக்கடை சிறுகடை வியாபாரிகளை கணக்கெடுத்து அந்தந்த பஞ்சாயத்து மூலம் தரைக்கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க கோரியும் 

தரைக்கடை சிறுகடை வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் மானியத்தில் கடன் வசதி செய்து கொடுக்க கோரியும் 

சோமரசம்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தரைக்கடை வியாபாரிகளுக்கு இடம் தேர்வு செய்து தினசரி மார்க்கெட் தரைக்கடை வியாபாரிகளுக்கு ஏற்படுத்தி கொடுக்க கோரியும் 

அந்தந்த பஞ்சாயத்தில் வியாபாரிகளை முறையாக கணக்கெடுத்து தேர்தல் நடத்தி (வெண்டிங் கமிட்டி வியாபாரிகள் நலக்குழு) அமைத்துக் கொடுக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தையும் மாநில அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன  முடிவில் ஒன்றிய தலைவர் தோழர் KN. ஜெகநாதன் நன்றி கூறினார்
Previous Post Next Post