மன்னார்குடி அருகே அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 50 பேர் படுகாயம் . மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை .
திருவாரூர் மாவடி்டம் மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற அரசு பேருந்தும், அதேபோன்ற திருத்துறைப்பூண்டியில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் தட்ங்கோவிலை அடுத்த கீழ கண்டமங்கலம் என்கிற இடத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. திருத்துறைப்பூண்டியில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்து ஆர்ச் என்ற இடத்தில் சாலையின் நடுவே மதுபோதையில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தின் ஓட்டுநர் பஸ்சின் ஸ்டேரிங்கை வளைத்தபோது எதிரே வந்த அரசு பேருந்து மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் இரு பேருந்தில் பயணம் செய்தவர்கள் படுகாயம் அடைந்தனர். பேருந்தில் இருந்த பயணிகளின் அலறல் சத்தத்தை கேட்டு சாலையில் சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு பேருந்தில் இருந்து வெளியே கொண்டுவந்தனர். பின்னர் அனைவரும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அருகில் உள்ள மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவ்விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது