பத்திரிக்கை ஊடக செய்தியாளர்கள் சந்திப்பு
இடம்:கோட்டூர் மன்னார்குடி,,
நாள்:29.10 .2023
காவிரி டெல்டாவில் 18 லட்சம் ஏக்கர் த பாதிக்கப்பட்ட விவசாயிகளை திமுக அரசு கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட்டது..
பி ஆர் பாண்டியன் குற்றச்சாட்டு
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பி ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் கோட்டூர், இருள்நீக்கி, திருப்பத்தூர்,
திருக்களார், மீனம்பநல்லூர், களப்பால், அக்கரைக்கட்டகம், வேதபுரம், நல்லூர், ஒரத்தூர்,
83 குலமாணிக்கம், மாங்குடி,மருதவனம், வங்கநகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று சம்பா சாகுபடி பயிர் பாதிக்கப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த..
பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
காவிரி டெல்டாவில் வரலாறு காணாத வகையில் பேரழிவை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். டெப்டா மாவட்டங்கள் முழுமையிலும் சுமார் 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி முழுமையும் அழிந்து வருகிறது.
பல்வேறு இடங்களில் நேரடி விதைப்பு செய்து முளைத்த பயிர்களுக்கு உரமிட தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகிறது. பல இடங்களில் நாற்று விடப்பட்டு நடவு செய்ய முடியாத நிலையில் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் நேரடி விதைப்பு மேற்கொண்டு முளைப்பதற்கு கூட தண்ணீர் இன்றி கருதிவிட்டது.
இவ்வாறு பல வகைகளில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறுவை அறுவடை முடிந்து தாழடிப் பயிர்கள் சுமார் 3 லட்சம் ஏக்கரில் சாகுபடி துவக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கோடை உழவுப் பணிகளை மேற்கொள்ள அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தனியார் நிறுவனங்களை மூலம் கோடை உழவு இலவசமாக தமிழ்நாடு முழுமையிலும் மேற்கொள்வதற்கு உதவி புரிந்தார்.
2015-16ஆம் ஆண்டுகளில் வறட்சி பாதித்த போது காப்பீட்டுக்கான விவசாயிகளுடைய பிரிமிய பங்கு தொகை முழுமையும் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஏற்றுக்கொண்டார்.
தற்போது பாதிக்கப்பட்டிருக்கிற விவசாயிகளை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. அமைச்சர்களோ, அதிகாரிகளோ பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்ல முன்வரவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளில் பரிதவிப்பதை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை ஒட்டுமொத்தமாக காவிரி டெல்டா விவசாயிகளை திமுக அரசு கைவிட்டு விட்டது.பாதிக்கப்பட்ட விவசாயிகளை வேளாண்மையில் ஊக்கப்படுத்த ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் ஊக்க நிதியாக வழங்கி விவசாயிகளுக்கு உதவிட வேண்டும்.
உடனடியாக தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊக்க நிதியாக ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பா சாகுபடி மேற்கொள்ள வழங்க வேண்டும்.காப்பீட்டுத் தொகை முழுமையும் தமிழ்நாடு அரசு செலுத்த முன்வர வேண்டும்.
கூட்டுறவு கடன் நிபந்தனையின்றி வழங்க முன்வர வேண்டும். காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத நிபந்தனைகளை சொல்லி பிரீமியம் பெறுவதற்கு தடை செய்து வருகிறது. மத்திய அரசு விவசாயிகளை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க முயற்சிக்க கூடாது என தமிழக அரசுக்கு வாய்மொழி உத்தரவு வந்திருப்பதாக வெளிவந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க முன்வர வேண்டும் என்றார்.
முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் மாங்குடிசரவணன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் ராவணன், ஒன்றிய துணைச் செயலாளர் கோட்டூர் ரத்தினசாமி,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் , மோகன், ராமச்சந்திரன்உள்ளிட்ட முன்னணி விவசாயிகள் உடன் இருந்தனர்.
இதனை தங்கள் ஊடகம் பத்திரிகைகளில் வெளியிட்டு உதவிட வேண்டுகிறேன்.
இவன் :
என் மணிமாறன் செய்தி தொடர்பாளர்.