ஆற்காட்டில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதற்கு காவல் துறையே காரணம்எஸ்.எம்.என்.கே மாநிலத் தலைவர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு

ஆற்காட்டில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதற்கு காவல் துறையே காரணம்
எஸ்.எம்.என்.கே மாநிலத் தலைவர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு

சிறுபான்மை மக்கள் நலக் கட்சியின் மாநிலத் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு 

 ராணிப்பேட்டை மாவட்டம் சிறுபான்மை மக்கள் நல கட்சியின் மாநில தலைவர் 
M.சாமுவேல்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார் அந்த மனுவில் 
 ஆற்காடு அடுத்த தாழனூர் ஊராட்சிக்குட்பட்ட கிருஷ்ணாவரம்
கூட்டுரோடு பாரதி நகர் தெருவில் பொன்னுசாமி என்பவரின் மகன் P.ரேனு
என்பவர் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டி சுமார் 15 வருடங்களுக்கு
மேலாக வசித்து வருகிறார். 

மேலும் சொந்தமாக பூட்டுத்தாக்கு பகுதியில்
வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவர் அருந்ததிய கிறிஸ்துவர் ஆவார்.
நந்தியாலம் திருச்சபையில் அங்கத்தினராக இருந்து வருகிறார். திருச்சபைக்கும்
இவர் வீட்டிற்கும் சுமார் 10 கிலோமீட்டர் 
தூரம் உள்ளது.
திருச்சபைக்கு
பிள்ளைகளுடன்
சென்று வர முடியாத காரணத்தினால்
 இவர்
குடும்பத்துடன் வீட்டிலேயே ஜெபம் செய்து வருகிறார்.இந்த நிலையில் இவர் 
வசித்து வரும் பாரதி நகர் தெருவை சேர்ந்த முருகேசன், பிரபு த/பெ. சந்திரன்,
விஜி த/பெ.சந்திரன் என்பவர்கள் சாதி அடிப்படையிலும் இவர் சொந்தமாக
வீடு கட்டி
வசித்து 
வருவதாலும் பொறாமைக்கொண்டு அந்த 
பகுதியிலிருந்து துரத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு தன்னுடைய  சாதி மக்களை
ஒன்றினைத்து இவர் கிறிஸ்துவர் என்பதால் மதம் மாற்றம் செய்வதாகவவு
திருச்சபை நடத்தி வருவதாகவும்,காரணம் காட்டி 17.07.2023 அன்று
காவல்துறையில் புகார் அளித்தனர்.

 காவல்துறையினர் விசாரித்து அவர்களின்  வழிகாட்டுதலின்படி அவரும் அவரது குடும்பம் மட்டும் ஜெபம் செய்து
வருகிறனர் வெளிநபர்கள் யாரும் வருவதில்லை. அவர் சபை நடத்துவதற்கு
அவர் போதகரோ, அல்லது போதகர் பயிற்சி பெற்றவரோ கிடையாது.
ஒரு சாதாரண கிறிஸ்துவர் மட்டும்தான்.
 இப்படியிருக்கும் பட்சத்தில் இந்து முன்னணி இயக்கத்தின் தலைவர்

ராஜேஷ் வழிகாட்டுதலின்படியும், ஆற்காடு நகர இந்து முன்னியின்
பொறுப்பாளர்களின் துணையோடு இவருக்கு சுமார் 30 வாரங்களாக தொடர்ந்து
தொல்லை கொடுத்து வருகின்றனர். 

வீட்டின் மீது கல் அடிப்பது, தாக்குவது,
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தைகளை பேசி துன்புறுத்தி
வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ரேனு இல்லாத நேரத்தில் அவர்
மனைவியிடம் தகாத வார்த்தைகளால் பேசுவது வழக்கமாக செய்து
வருகின்றனர்.

 தற்பொழுது  10.10.2023 அன்று சுமார் மாலை 3.30 மணி
அளவில் பிரபு த/பெ. சந்திரன் என்பவர் மது அருந்திவிட்டு வந்து ரேனுவின்
வீட்டின்மீது கல்லைப்போட்டு வீட்டின் மேல்கூரை சிமெண்ட் சீட் மற்றும் கதவின்மீது கட்டுக்கல்லை போட்டு கதவையும் உடைத்துள்ளனர்.
இது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாக இருந்து வருகிறது. 

ஆற்காடு
நகர காவல் துறையினர் அவ்வப்போது சம்பவ இடத்திற்கு சென்று சமாதானம்
செய்து வருவதையே நோக்கமாக கொண்டுள்ளனர்.
 பாதிக்கப்பட்ட நபருக்கு
எந்த நியாயமும் கிடைக்கவில்லை. வன்முறையாளர்கள் மீது இதுவரையில்
வழக்கு பதிவு செய்யவில்லை. மெத்தனமாக இருந்து வருகின்றனர். வழக்கு
பதிவு செய்திருந்தால் மேற்கண்ட நபர்கள் ரேனுவிற்கு தொடர்ந்து தொல்லை
கொடுத்திருக்க மாட்டார்கள். ரேனு தொடர்ந்து பாதிக்கப்படுவதற்கு ஆற்காடு
நகர காவல் துறையினரே காரணமாக இருக்கின்றனர்.


எனவே கனம் ஐயா அவர்கள் வன்முறையாளர்கள்மீது வழக்கு பதிவு
செய்து ரேனுவின் குடும்பத்தினரின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின்
உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வழங்குமாறு 
கேட்டுக் கொள்வதாக இந்த மனதில் கூறப்பட்டுள்ளது.
Previous Post Next Post