கூத்தாநல்லூர் நகராட்சியில் டெங்கு பணியில் பல கோடி ரூபாய் ஊழல் நடத்திய நகராட்சி ஆணையர் மற்றும் நகர்மன்ற தலைவர் பற்றிய ஆதாரங்களை வெளியிட்ட ஜேசிபி உரிமையாளருக்கு நிலுவை தொகை பல வருடங்களாக தராமல் இழுத்தடிப்பு . நகராட்சியை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட உரிமையாளர் .


திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவர் கடன் பெற்று சொந்தமாக ஜே.சி.பி.வாகனம் ஒன்றை வாங்கி வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தி வருகிறார். அந்நிலையில் அவருக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் கூத்தாநல்லூர் நகராட்சிக்கு ஒப்பந்த அடிப்படையில் தனது ஜேசிபி வாகனத்தை வாடகைக்கு விட்டிருக்கிறார். கடந்த 3 ஆண்டு காலமாக கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகத்திடம் இருந்து வாடகை வரவில்லை. இதனை பலமுறை கேட்டுப் பார்த்தும் நகராட்சி ஆணையர் சாக்கு போக்குகளை சொல்லி விஜயராகவனை அலையவிட்டு இருக்கிறார். அதுமட்டுமல்ல வாடகை பாக்கி தொகையான ரூ.1.30 லட்சத்துக்கான காசோலையை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் தனக்கு கமிஷனாக ரூ.25,000 தர வேண்டும் எனவும் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டு ஜேசிபி வாகன உரிமையாளர் விஜயராகவன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போதாவது அந்த நகராட்சி ஆணையர் இது குறித்து அழைத்து பேசியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை நிலுவை தொகை குறித்து யாரும் பேச முன்வரவில்லை . கடந்த மாதம் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவகாசம் கேட்டு அந்த தேதியும் முடிவடைந்து விஜயராகவனுக்கு நிலுவைத் தொகை செலுத்தாத காரணத்தினால் வாடகை பாக்கியை தர வேண்டும் என்று கூத்தாநல்லூர் நகராட்சி முன்பு விஜயராகவன் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். ஆனால் தற்போது உள்ள நகராட்சி ஆணையர் பாதிக்கப்பட்ட விஜயராகவனிடம் உங்களது கோப்புகள் தொலைந்து விட்டது ஆகையால் உங்களுக்கு பணம் தர வேண்டியது இல்லை என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது . விஜயராகவன் இதற்கு முன்னதாக நகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக டெங்கு ஒழிப்பில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார் அதுமட்டுமல்லாது டெங்கு ஒழிப்பு பணியின் மேற்பார்வையாளர் அண்ணாமலை நகராட்சியில் நடக்கும் ஊழலை பற்றியும் நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷீரா பற்றிய தகவல்களை பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி உள்ள வீடியோ மற்றும் ஆதாரங்களை வெளியிட்டுள்ளதால் விஜயராகவனுக்கு நிலுவை தொகையை நகராட்சி நிர்வாகமும் நகர்மன்ற தலைவரும் இழுத்தடித்து வருகின்றனர் .

Previous Post Next Post