தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழகமுதல்-அமைச்சருமான ஜோசப். விஜய் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தி சிலை அருகே விழுப்புரம் வடகிழக்கு த.வெ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது விழுப்புரம் வடக்கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைமை விமுஷ்ரா,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி விக்னேஷ்வரன், திண்டிவனம் நகர தகவல் தொழில்நுட்ப அணி லையன், தனசேகர், வடகிழக்கு மாவட்டம் சதீஷ், 9-வது வார்டு கிளைக் கழக செயலாளர் நவீன் பிரபு, திண்டிவனம் நகர தொண்டரணி வசந்த்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறியாளர்
சக்திவேல் கலந்து கொண்டு மேள தாளத்துடன் பட்டாசு வெடித்தும் கேக் வெட்டி, ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மாபெரும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேற்கு நகர செயலாளர் யூத். மணி, கிழக்கு நகர செயலாளர் வேந்தன், கலந்து கொண்டு சிறப்பித்தனர் இதில் மாவட்ட மாணவர் அணி செந்தில்குமரன், நகர இளைஞரணி தளபதி ரஹீம்,ரசூல்,அப்சர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானேர் கலந்து கொண்டனர்