17வது சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் டிஆர்பி ராஜா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் உதயசூரியன் சின்னத்தில் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வாக்கு சேகரிப்பின்போது வழிநடுகிலும் வாக்காளர்கள் திரண்டு ஆரத்தி எடுத்து, நெற்றியில் வெற்றி திலகமிட்டு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். குறிப்பாக மன்னார்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலவாசல் குமாரபுரம் இடையர் எம்பேத்தி உள்ளிட்ட பகுதிகளில் டி.ஆர்.பி.ராஜா , பிரச்சார வாகனத்தில் சென்று உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார் அப்போது வாக்காளர்கள் வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜாவை வரவேற்கும் வகையில் இம்மண்ணிற்கு உரித்தான மண் மனம் கமிழும் கரகாட்ட கலை குழுவினருடன் ஆடிப்பாடியும், தாரை தப்பட்டை விண் அதிர முழங்கிட வாணவேடிக்கையுடன் மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர். அப்போது பேசிய வேட்பாளர் டிஆர்பி ராஜா உங்க வீட்டு பிள்ளை ஆகிய எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரும் வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் தமிழக முதலமைச்சரை உலகமே உற்று நோக்கும் வகையில் நம்பர் ஒன் முதல்வராக இருந்து தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளார் மன்னார்குடி தொகுதியில் நான் செய்திருக்கிற பணிகளை 100 பக்கங்களில் சொல்ல முடியும் அந்த அளவிற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து சேர்த்து உள்ளேன் மன்னார்குடிக்கு திமுகவை தவிர வேறு யாராலும் எந்த திட்டங்களையும் முழுமையாக கொண்டு வந்து சேர்க்க முடியாது நான் தொழில் துறை அமைச்சராக பதவி ஏற்ற 3 வருட காலத்தில் ரூ. 9, லட்சத்து 83 ஆயிரம் கோடி ஒட்டு மொத்தமாக 12 லட்சத்து 53 ஆயிரம் கோடி பதிவு செய்துள்ளேன் மன்னார்குடிக்கு புதிய பேருந்து நிலையம் , பாதாள சாக்கடை திட்டம் சுற்றுவட்ட புறவழிச் சாலை , கிராமங்கள் தோறும் தார் சாலை உள்ளிட்ட எண்ணற்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து மன்னார்குடிக்கு சேர்த்து உள்ளேன் அதிமுக ஒன்றாக இருந்தபோது கூட மன்னார்குடிக்கு ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்பது உங்களுக்கு நன்றாக தெரியும் கடந்த 10 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் மன்னார்குடிக்கு என்று எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தில் பாஜக அரசு மீட்டர் வைக்க முயற்சித்து வருகிறது ஆனால் திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்புசெட்டுகள் வழங்கப்படும் என்ன தமிழ்நாடு முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார் இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி , இளைஞர்களுக்கான ஆட்சி ஆனால் அதிமுக காரர்கள் உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்டவர்கள் என்பது விவசாயிகளுக்கு நன்றாக தெரியும் என தெரிவித்தார்
மன்னார்குடி தொகுதியில் நான் செய்திருக்கிற பணிகளை 100 பக்கங்களில் சொல்ல முடியும் அந்த அளவிற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து சேர்த்து உள்ளேன் மன்னார்குடிக்கு திமுகவை தவிர வேறு யாராலும் எந்த திட்டங்களையும் முழுமையாக கொண்டு வந்து சேர்க்க முடியாது என மன்னார்குடியில் டி.ஆர்.பி ராஜா பேச்சு
தமிழர் களம் மாத இதழ்
0