UATT 2.0 அரசாணைகளை ரத்து செய்ய வலியுறுத்தி தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 'உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 2.0' (UATT 2.0) தொடர்பான அரசாணைகளை ரத்து செய்யக்கோரி மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மாநில வேளாண் ஏற்றுமதியில் ரூ.58,221 கோடி (45%) பங்களிப்பு வழங்கும் தோட்டக்கலைத் துறையின் தனித்துவத்தை இப்புதிய திட்டம் சிதைப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 புதிய திட்டத்தின் கீழ் 80% களப்பணியாளர்களுக்கு 8 முதல் 22 கிராமங்கள் வரை ஒதுக்கப்பட்டு கடுமையான பணிச்சுமை திணிக்கப்பட்டுள்ளது. ஒரே அலுவலர் பல துறைகளைக் கவனிப்பதால், விவசாயிகளுக்கு உரிய தொழில்நுட்ப ஆலோசனைகள் கிடைக்காமல் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க UATT 2.0 அரசாணைகளைத் திரும்பப் பெற்று, ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய திட்டத்தையே தொடர வேண்டும் என கூட்டமைப்பு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
Previous Post Next Post