ராணிப்பேட்டை மாவட்டம், விசாரம் அருகே உள்ள நந்தியாலம் கிராமத்தில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக, ஏரி நிறம்பியுள்ளது ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் நீரூற்று ஏற்பட்டு நீர் தேங்கி குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, சர்ச் தெரு, மாங்குப்பம் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வடிகால்வாய் வசதி முறையாக இல்லாததாலும், கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து மூடியுள்ளனர்
மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.
இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தேங்கிய நீரில் விஷ ஜந்துக்கள் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு, தேங்கிய நீரை வெளியேற்றவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இப்பகுதியில் மருத்துவ முகாம்கள் அமைத்து, நோய் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.