தருமபுரி மாவட்டம், அரூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவரை சாதி பெயர் சொல்லி திட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் மீது வழக்கு போட முயற்சிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத்தலைவர் ஆனந்தன்,முத்து, மாவட்ட செயலாளர் சேகர், மாது உள்ளிட்டவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார். ஆர்பாட்டத்தில் 80-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.