திண்டிவனம், ஆக.25
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2003-05 ஆண்டு பயின்ற மாணவ,மாணவிகள் மறு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
.
இந்நிகழ்ச்சிக்கு ஒலக்கூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஞானவேல் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிவேல் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னாள் மாணவ,மாணவிகள் சந்தித்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து நெகிழ்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து தங்களது ஆசிரியர்கள் ஜமுனிராணி,பார்த்தசாரதி, செல்வம், ஜெயச்சந்திரன் ,குணசேகர், சுந்தரலிங்கம், ராமகிருஷ்ணன், ஜெய்கணேஷ்,சேகர், சிவராமன்,அய்யாசாமி, சிவகுமார், ராஜசேகர் உள்ளிட்டோருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 2003-2005 மாணவ மாணவியர்கள் சார்பில் பள்ளி வகுப்பறைக்கு ஸ்மார்ட் கிளாஸ் ரூமை டிஜிட்டல் முறையில் அமைத்துக் கொடுத்தனர். மேலும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் முன்னாள் மாணவ,மாணவிகளின் குடும்பத்தினர் குழந்தைகள் ஒலக்கூர் கிராம பொதுமக்கள் என ஏராளமானேர் கலந்து கொண்டனர்.