தேனியில் மது போதையில் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை அடித்து கீழே தள்ளியதில் எதிரே வந்த அரசுப் பேருந்தில் சிக்கி அடையாளம் தெரியாத நபர் தலை நசுங்கி பலி.
*தப்பி ஓட முயன்ள மற்றொரு நபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து கட்டி வைத்து போலீசில் ஒப்படைப்பு.!!*
தேனி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மூன்றாம் தடத்தில் பெரியகுளம் ஸ்டேட் பாங்க் காலணியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்ற 27 வயது இளைஞர், அடையாளம் தெரியாத சுமார் 50 வயதுடைய நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மது போதையில் இருந்த இருவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியதில், 50 வயதுடைய நபரை கார்த்திக் ராஜா அடித்துத் தள்ளியுள்ளார். அவர் கீழே விழந்த போது பேருந்து நிலையத்தில் மேட்டுப்பாளையம் புறப்பட்ட அரசுப் பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள், தப்பியோட முயன்ற கார்த்திக் ராஜாவை சுற்றி வளைத்து பிடித்து கட்டி வைத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தேனி நகர் போலீசார், சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார்த்திக் ராஜாவை கைது செய்த தேனி நகர் போலீசார் கார்த்திக் ராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது......