நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஓலைப்பாளையம் பகுதியில் உலக ரத்த தான தினத்தில் விடியல் ஆரம்பம் மற்றும் எண்ணங்களின் சங்கமம் அமைப்பு சார்பாக மாபெரும் ரத்ததான விழிப்புணர்வு பேரணி மற்றும் பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி நடத்தப்பட்டது.
இதில் விடியல் பிரகாஷ் தலைமையில் உதிரம்
கொடுப்போம் உயிர் காப்போம் என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தலைமையாசிரியர் லதா அவர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் தேவராஜ் அவர்கள் புத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள்.
ரத்த தானத்தை பற்றி முனைவர் பங்கயம் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்கள்.
மாபெரும் பேரணியை நலவாரிய செல்வராஜ் மற்றும் பஞ்சாலை சண்முகம் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
பேரணியில் பொதுமக்களுக்கு விழிப்புணர் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
முடிவில் சௌந்தர் அவர்கள் நன்றி உரை உரையாற்றினார்.
இனிய விழாவில் கோமதி, கண்ணன், மதிவதனி, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.