திருச்சி மாவட்ட ஏஐடியுசி தரைக்கடை சிறுகடை வியாபாரிகள் சங்க மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் கூட்டம் 26.9.2024 இன்று மதியம் 1:30 மணி அளவில் ஒன்றிய தலைவர் தோழர் KN. ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் MR. முருகன் அவர்கள் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரை ஆற்றினார் கூட்டத்தில் நடந்து முடிந்த வேலைகளை முன்மொழிந்து ஒன்றிய செயலாளர் தோழர் K. மேகராஜ் உரையாற்றினார் கூட்டத்தில் தோழர்கள் முபாரக், செல்வி, துரைசாமி ,கோவிந்தன், விஸ்வநாத் ,சுப்புலெட்சுமி, மகாலெட்சுமி, மேகராஜ், வடுவம்மாள் ,ராஜகுமாரி, பாலு, தனலெட்சுமி, ஜெகநாதன், ராஜா, சகுந்தலா, காமாட்சி, அமுதா, மல்லிகா, பாலாஜி, சண்முகவள்ளி ஆகியோர் கலந்துகொண்டு
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
அந்தந்த பஞ்சாயத்தில் தரைக்கடை சிறு கடை வியாபாரிகளை கணக்கெடுக்க வேண்டும்
அனைத்து வியாபாரிகளுக்கும் அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும்
அனைத்து பஞ்சாயத்திலும் தேர்தல் நடத்தி வென்டிங் கமிட்டி அமைக்க வேண்டும்
தரைக்கடை வியாபாரிகளுக்கு அரசு இடம் தேர்வு செய்து தினசரி மார்க்கெட் வசதி ஏற்படுத்தி புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர்களை அழைத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டன
பொருளாளராக தோழர் R. பாஸ்கர் துணைத்தலைவராக தோழியர் S.அமுதா துணைச் செயலாளராக தோழியர் K. தனலெட்சுமி ஒன்றியக் குழு உறுப்பினர்களாக தோழியர் A . ராஜகுமாரி தோழர் P . கோவிந்தன் ஆகியோர்களை ஏக மனதுடன் தேர்வு செய்யப்பட்டு
கூட்டத்தில் கட்டட சங்க மாவட்ட துணை தலைவர் தோழர் S. முத்தழகு பெண்கள் சங்க மாநில துணை ஒருங்கிணைப்பாளர் தோழியர் M .மருதாம்பாள் மாதர் சங்க மாவட்ட துணை செயலாளர் தோழியர் S .முத்துலெட்சுமி சிபிஐ நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் M. ரஜியாபேகம் கட்டட சங்க துணைத் தலைவர் தோழர் N. பாஸ்கரன் உள்ளாட்சி சங்க ஒன்றிய செயலாளர் தோழியர் J .நதியா மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தோழியர் B. வித்யா இளைஞர் மன்ற ஒன்றிய தலைவர் தோழர் T. விஸ்வநாத் ஒன்றிய செயலாளர் தோழியர் A. இன்னசென்ட் விமலா மேரி ஆகியோர் கலந்து கொண்டு கூட்ட முடிவில் புதிய ஒன்றிய குழு உறுப்பினர் தோழர் P . கோவிந்தன் நன்றி கூறினார்