விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் பனை விதைகள் நடும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது இந்த ஆண்டு இன்று 15 9 24 ஞாயிறு காலை சரியாக 10:00 மணிக்கு குமாரபாளையம் தட்டான் குட்டை PWD வாய்க்காலில் இருபுறமும் தமிழ்நாடு அரசின் நடும் திட்டமான ஒரு கோடி பனை விதைகள் நடும் நிகழ்வில் விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பில் பனை விதைகள் விதைக்கும் திட்டமானது துவங்கப்பட்டது இந்நிகழ்விற்கு விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பில் விடியல் பிரகாஷ் பஞ்சாலை சண்முகம் மற்றும் சமூக ஆர்வலர் தீனா தலைமை ஏற்க ,
நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு ) திரு லீலா குமார் நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஊராட்சிகள் ரவிச்சந்திரன் பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் என் கிரிஜா உதவி பொறியாளர் பாண்டியன் தட்டான் குட்டை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி புஷ்பா செல்லமுத்து ஊராட்சி செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் முன்னிலை வகித்தார்கள்
SSM பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குமாரபாளையம் கலைக்கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி மாணவியர் ஐன்ஸ்டீன் பள்ளி மாணவ மாணவியர் வேமன் காட்டுவலசு அரசு உயர் நிலைப்பள்ளி ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவ மாணவியர் அபெக்ஸ் பொறுப்பாளர்கள் ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் அரிமா சங்க பொறுப்பாளர்கள் நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் நில முகவர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் சேவல் கொடியோன் பேரவை தலைவர் பரமன் பாண்டியன் துர்கா ரவி ex MC ஜமுனா ராணி சித்ரா ராசாத்தி உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பங்கேற்றார்கள் எதிர்கால தலைமுறைக்கு பனை விதைகளை விதைப்போம் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்