புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.!!ரயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை சார் அப்புறப்படுத்தி பின் ரயில் இயக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.!!

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.!!ரயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை சார் அப்புறப்படுத்தி பின் ரயில் இயக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.!!
இந்திய தண்டனைச் சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் இந்திய சாட்சி சட்டம் ஆகிய மூன்று சட்ட பிரிவுகள் புதிதாக அமல்படுத்தப்பட்ட நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த புதிய மூன்று பக்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தேனி ரயில் நிலையத்தில் வழக்கறிஞர் சங்கத்தினர் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் ரயில் தண்டவாளத்தில் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மதுரையில் இருந்து போடியை நோக்கி வந்த ரயில் தேனி ரயில் நிலையம் வந்தடைந்தது இதனால் மதுரை - போடி ரயில் முன்பு நின்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ரயில் புறப்பட தயாரான பின் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை அங்கிருந்து கலைந்து செல்ல கூறினார் இதனை அடுத்து ரயில் புறப்பட்டு சென்றது.

புதிய சட்டங்களை குறித்து வழக்கறிஞர்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு போலீசார் நிலையத்தில் குவிக்கப்பட்டன.......
Previous Post Next Post