தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் ரூ 3 கோடி மதிப்பில் மணிமண்டபம் அவர் பிறந்தநாளான அக்டோபர் 9ஆம் தேதி அரசு விழா நடத்தப்படும் என அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர்க்கு தேவேந்திர குல வேளாளர் மாநில நிர்வாக குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்

தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் ரூ 3  கோடி  மதிப்பில் மணிமண்டபம் அவர் பிறந்தநாளான அக்டோபர் 9ஆம் தேதி  அரசு விழா நடத்தப்படும் என அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர்க்கு  தேவேந்திர குல வேளாளர்  மாநில நிர்வாக குழு கூட்டத்தில்  நன்றி தெரிவித்து தீர்மானம் 
தமிழ்நாடு தேவேந்திரகுல மத்திய மாநில அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் அதன் மாநில தலைவர் ந. ரமேஷ்குமார் தலைமையில் . திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் சு செல்லதுரை ,பொருளாளர் ஈஸ்வர பாண்டியன் ,  உள்ளிட்ட மாநில நிர்வாகிகள்   பலர் கலந்து கொண்டனர் இந்த நிர்வாக குழு கூட்டத்தில் தேவேந்திரகுல  வேளாளர்களை எஸ் சி பட்டியல் இருந்து விடுவித்து பிசி பட்டியலில் இணைத்து பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பதவி உயர்வில் உரிய இன சுழற்சியை கடைபிடிப்பதோடு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை  உடனடியாக வழங்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றபட்டது அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில தலைவர்  கூறுகையில்  சுதந்திர போராட்ட  தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு  பரமக்குடியில் ரூ 3  கோடி  மதிப்பீட்டில்  மணிமண்டபம்  கட்டபடும்  சட்டமன்ற கூட்டத்தில் இம்மானுவேல் சேகரனார்   பிறந்தநாளான அக்டோபர் 9ஆம் தேதி    ராமநாதபுரத்தில் அரசு விழா கொண்டாடபடும் என அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேவேந்திரகுல மத்திய மாநில அரசு ஊழியர்கள் சங்கத்தின்  சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்  புதிய பென்சன் திட்டத்தை அடியோடு அழித்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை  கொண்டு  வரவேண்டும்  என  தெரிவித்தனர்   

பேட்டி  
1,  ந . ரமேஷ்குமார்  மாநில தலைவர்  மத்திய மாநில ஊழியர் சங்கம்
Previous Post Next Post