கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் பெற்று தர மறுக்கும் மத்திய , மாநில அரசை கண்டித்து மன்னார்குடியில் ரயில் மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் பெற்று தர மறுக்கும் மத்திய , மாநில அரசை கண்டித்து மன்னார்குடியில் ரயில் மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கர்நாடகாவிலிருந்து காவிரி நீர் பெற்று தர மறுக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மன்னார்குடியில் ரயில் மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர்  மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலை மறித்து மத்திய, மாநில அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மன்னார்குடி மயிலாடுதுறை பயணிகள் ரயில் 15 நிமிடம் கால தாமதமாக புறப்பட்டது. இதையடுத்து ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அனைவரையும் மன்னார்குடி காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்..
Previous Post Next Post