கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆவத்துவாடி உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஆவத்துவாடி அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 15ற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த
கலைஞரின் கனவு இல்லத்திட்டத்தில் 210 பயணாளிகளுக்கு பணி ஆணை வழங்கிய பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆவத்துவாடி உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஆவத்துவாடி அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 15ற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 210 பயணாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் இலவச வீட்டிற்கான பணி ஆணையை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் வழங்கினார். காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தில் 1100 பயணாளிகளுக்கு பணி ஆணை ஒதுக்கப்பட்ட நிலையில், முதன் முதலாக ஆவத்துவாடி சுற்று வட்டார கிராமங்களில் 210 பயணாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் அனைத்து பயணாளிகளுக்கும் பணி ஆணை வழங்கப்படும் என விழாவில் மதியழகன் பேசினார். இதில் மாவட்ட அவை தலைவர் நாகராஜ், காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மகேந்திரன், மாவட்ட கவுன்சிலர் சங்கர்,காவேரிப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன் மற்றும் வேடியப்பன், நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிவெளி இராமமூர்த்தி, ரமேஷ், வெண்ணிலா முருகேசன், சங்கர் ராஜாராம் ,விமலாமணி, நாகபூஷணம், சந்துரு, கவுன்சிலர் கருப்பண்ணன் உட்பட 1000த்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.