மன்னார்குடியில் அரசு தலைமை மருத்துவமனையில் கண் சிகிச்சைக்காக 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கண் பரிசோதனை மையம் திறப்பு

மன்னார்குடியில் அரசு தலைமை மருத்துவமனையில் கண் சிகிச்சைக்காக 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கண் பரிசோதனை மையம் திறப்பு  
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு இணையாக நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வருகிறது. குறிப்பாக மாதத்திற்கு 150 க்கும் மேற்பட்ட கண் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது. இதற்காக அதிநவீன பரிசோதனை கருவிகள் மற்றும் சிகிச்சை அளிக்கும் கருவிகள் மருத்துவமனைக்கு தமிழக அரசு சார்பில் ரூ 25 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. அதிநவீன இயந்திர பரிசோதனை கருவிகள் பிரிவு மையத்தை நகர்மன்ற தலைவர் சோழராஜன் தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் விஜயகுமார் துணைகண்கானிப்பாளர் மருத்துவர் கோவிந்தராஜ் மற்றும் ராஜகோபாலசாமி அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் உள்ளிட்ட மருத்துவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post