மன்னார்குடியில் அரசு போக்குவரத்து பேருந்துக்கள் குறைந்த அளவு பேருந்துக்களே இயக்கபடுகின்றன
ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சமரசம் ஏற்படுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தொழிலாளர் நலத்துறை அறிவித்திருந்தது அதன்படி சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நலத்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் நேற்று ஏஐ டியூசி, சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மொத்தம் 70 பேருந்துகள் உள்ள நிலையில் தற்போது வரையிலும் 22 பேருந்துகள் மட்டுமே காவல்துறை பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றனர் பொதுமக்களின் வருகையை பொருத்து மேலும் பேருந்துகள் இயக்கபடும் .என மன்னார்குடி கிளை மேளாளர் தெரிவித்துள்ளார் .